Saturday, June 2, 2018

காவிரி ஆணையம் அமைந்ததில் ஏன் எவருக்கும் மகிழ்ச்சி இல்லை?

கொஞ்சம் விநோதமாகத்தான் இருக்கு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும். அமைந்ததும், அதைப் பற்றி மத்திய அரசிதழ்ல வெளியிடணும் அப்படின்னு போராட்டம், பந்த் அது இதுன்னு என்னென்னமோ நடந்தது.
இப்போ கேட்டது கிடைச்சிருக்கு. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, மத்திய அரசிதழ்லயும் வெளியாகி, அதனுடைய நகல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கு. ஒவ்வொரு மாநிலத்துல இருந்தும் வாரிய உறுப்பினர்களா இரண்டு பேரை நியமிக்கணும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதுக்கும் 2 பேரை பரிந்துரை பண்ணிட்டாங்க.
இதுக்காகத்தான் வருடக்கணக்கில் போராட்டங்கள் நடந்தது. இப்போ பலன் கிடைச்சிருக்கு. இது கொண்டாட வேண்டிய நேரம். குறைந்தபட்சம் அது பற்றி பேச வேண்டிய நேரம். ஆனால் இதைப்பற்றி பேச்சே காணோம். அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, எதிர்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, இதற்காக தொடர்ச்சியாக போராடியவர்களும் கண்டு கொள்ளவில்லை. மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. ஏன்?

No comments: