நடிகர்கள்: சஞ்சய் மிஸ்ரா, நீனா குப்தா, சௌரப் சச்தேவா
இயக்கம்: ஜஸ்பால் சிங் சாந்து மற்றும் ராஜீவ் பர்ன்வால்
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க வயதான தம்பதி (சஞ்சய் மிஸ்ரா மற்றும் நீனா குப்தா). தங்கள் மகனின் படிப்புக்காக வாங்கிய கடனும், அதனால் ஏற்படும் அவமானங்களும் அவர்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுகின்றன. தன் குடும்பத்தைச் சீரழித்தவனை, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பழி தீர்க்கும் அந்த எமோஷனல் போராட்டமே இந்தப் படம்.
பார்க்கும்போது தோன்றியது:நிச்சயமாக இது 'திருஷ்யம்' (Drishyam) பாணியில் அமைந்த ஒரு சீட்-எட்ஜ் த்ரில்லர். ஆனால், இதில் இருக்கும் அந்த எமோஷனல் கனம் நம்மை உலுக்கி விடுகிறது. இவ்வகைப் படங்கள் மிகச்சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தையும், அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
ஒன்றவைக்கும் திரைக்கதை:படம் பார்ப்பவர்கள் உடனடியாக அந்தக் குடும்பத்துடன் ஒன்றிவிடுகிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்களும், அந்தத் தந்தை படும் அவமானமும் நமக்கே நடப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. அதனாலேயே, அவர்கள் தவறே செய்தாலும் (கொலை செய்தாலும் கூட), அவர்கள் எப்படியாவது சட்டத்திடம் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நாம் மனதார விரும்புகிறோம். இதுதான் திரைக்கதையின் மிகப்பெரிய வெற்றி.
நடிப்பு:சஞ்சய் மிஸ்ரா - இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒரு சாது மிரண்டால் என்னவாகும் என்பதைத் தனது அமைதியான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். அவருக்கு இணையாக நீனா குப்தா ஒரு நடுத்தர வர்க்கத் தாயின் தவிப்பை அப்படியே பிரதிபலித்துள்ளார்.
பார்க்கலாமா? கண்டிப்பாக.
தற்போது வாத் -2 வந்துவிட்டது. அதற்கு முன் இதைப் பார்த்துவிடுங்கள். விறுவிறுப்பான த்ரில்லராகவும், அதே சமயம் மனதைத் தொடும் எமோஷனல் டிராமாவாகவும் ஒரு நல்ல படம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வு.
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
#Vadh #Netflix #Crime #Thriller #FilmReview #MovieReview #யாதெனக்கேட்டேன்


