Saturday, February 10, 2007

காதல் பிரார்த்தனை


கடவுளே!

தூரிகையைக் கொடு
அவளை ஓவியமாகத் தீட்டுகிறேன்.

ஸ்வரங்களைக் கொடு
அவளை இசையாகப் பாடுகிறேன்

வார்த்தைகளைக் கொடு
அவளை கவிதையாக வடிக்கிறேன்

உளியைக் கொடு
அவளை சிற்பமாக செதுக்குகிறேன்.

விருப்பமில்லாவிட்டால்
காதலைக் கொடு
எல்லாவற்றையும் செய்கிறேன்.

Friday, February 9, 2007

காதல் அதிசயம்

அதிசயம் - 1
கண்ணை மூடிக்கொண்டு வலது கை சுட்டு விரலால் நுனி மூக்கை தொட முடிந்தால், அழகான யாரோ உங்களை காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

அதிசயம் - 2
முதல் அதிசயத்தைப் படித்த அனைவருமே கண்ணை மூடிக்கொண்டு மூக்கைத் தொட முயற்சித்திருப்பீர்கள்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

அதிசயம் - 3
முதல் அதிசயம் வெறும் கப்சா.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிசயம் - 4
காதலிக்காத எல்லோருமே காதல் எப்படி வந்தாலும், கப்சா என்றுதான் சொல்வார்கள்.

முத்தம்


கொடுத்த முத்தத்தை விட
கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம்.

முத்தமிட்டது சில வினாடிகளே!
முத்தம் தந்த பரவசம்
தினம் தினம்.

சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன்
அவளை முத்தமிட.
ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன்
முதல் முத்தம்.


முதலில் கை
பின் கன்னம்
அப்புறம் உதடுகள்
இந்த வரிசையில் முத்தமிட நினைத்தேன்.
அவள் என் உதடுகளை கவ்வியதும்
எல்லாமே மாறிப்போனது.