அந்த சாமியாரின் பெயர் சுவாமி சரியானந்தா. அவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும். அவர் சொன்னால் அது பலிக்கும். அவர் சொல்லி எதுவுமே நடக்காமல் போனதில்லை. அதனாலேயே அவருக்கு சுவாமி சரியானந்தா என்ற பெயர் வந்துவிட்டது. மேட்டுக்குப்பம் பக்தர்களிலிருந்து நியுஜெர்சி பக்தர்கள் வரை எல்லோருக்கும் அவர் ஒரு மகான். அவர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு அருள்வாக்கு வாங்கிச் செல்வார்கள்.
”சாமி”
”உனக்கென்னம்மா தெரியவேண்டும்”
”எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?”
”என்னைப் போலவே உனக்கொரு மாயக் கண்ணன் வந்து பிறப்பான் மகளே”
ஆயிரம் ரூபாய் தட்சணை வைத்துவிட்டு, பக்தை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அடுத்த பக்தர் பரவசத்துடன் நுழைகிறார்.
”சுவாமி”
”சொல் குழந்தாய்”
”எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?”
”நிச்சயம் கிடைக்கும், மகிழ்ச்சியுடன் போ”
தட்டில் சில நூறுகளை வைத்துவிட்டு அவர் நகர அடுத்த பக்தர் வருகிறார்.
”குருஜி”
”எனக்கு இந்த டென்டர் கிடைக்குமா?”
”நமது ஆசிரமத்திற்கு 10 இலட்சம் கொடுத்தால் அந்த 100 கோடி டென்டர் உனக்குதான்?”
”இதை நான் எப்படி நம்புவது?”
”ஹா..ஹா..ஹா..சந்தேகப் பதரே.. என் மேலேயே சந்தேகமா... இருக்கட்டும்... சிஷ்யா?”
”சொல்லுங்கள் குருவே”
”டென்டர் கிடைக்கும் என்று நான் சொன்னதை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு பத்து லட்சம் வாங்கியபின், இந்த சநதேகபுத்தி அற்பனை அனுப்பி வை”
”உத்தரவு குருவே”
தட்சணையை வாங்கி உண்டியலில் போட்டபடி ”டென்டர் கிடைக்காது” என்று நோட்டுப் புத்தகத்தில் சிஷய்ர் எழுதுகிறார். பிறகு . . .
”குருவே எனக்கொரு சந்தேகம்”
”கேள் சிஷ்யா”
”ஆண் பிறக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பெண் என்று எழுதச் சொல்கிறீர்கள். வேலை கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் வேலை கிடைக்காது என்று எழுதச் சொல்கிறீர்கள். டென்டர் கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் டென்டர் கிடைக்காது என்று நோட்டுப்புத்தகத்தில் எழுதச் சொல்கிறீர்கள். ஏன் இப்படி?”
”சிஷ்யா !!! இது இந்த முட்டாள் பக்தர்களை ஏமாற்றும் எளிய வழி. யாருக்காவது நான் சொன்னது நடக்காமல் போனால் உடனே என்னிடம் தான் மீண்டும் வருவார்கள். அப்போது இந்த நோட்டுப் புத்தகம்தான் நம்மை காப்பாற்றும்”
”எப்படி?”, என்று சிஷ்யர் கேட்க, அடுத்து ஒரு பெண் பக்தை உள்ளே வருகிறார். முகத்தில் பதற்றம், ஏமாற்றம்.
”சாமி..ஏன் என்னை கைவிட்டுட்டீங்க?”
”அழாமல் விஷயத்தை சொல் பக்தையே”
”எனக்கு ஆண் பிறக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டதே”
”பக்தையே நீ தவறாகச் சொல்கிறாய். நான் சரியாகத்தான் சொன்னேன். சிஷ்யா அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் காட்டு”
”அட ஆம் குருவே, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அம்மா நீங்களும் பாருங்கள்”, என்று சிஷ்யர் நோட்டுப்புத்தகத்தை நீட்ட அந்தப் பெண் அதைப் படித்துவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள்.
”ஐயோ சாமி..நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, புலம்பிக் கொண்டே வெளியே சென்ற பின் குருஜி புன்னகைக்கிறார்.
”சிஷ்யா, இப்போது புரிகிறதா நான் ஏன் உன்னை மாற்றி எழுதச் சொல்கிறேன் என்று?”
”புரிகிறது குருவே..இந்த உலகில் உங்களை வெல்ல யாரும் இல்லை”
சுவாமி சரியானந்தா வாழ்க.. சுவாமி சரியானந்தா வாழ்க..
பக்தர்களின் வாழ்த்து கோஷம் டிவியில் லைவ்வாக 75 நாடுகளில் ஒலிக்கிறது.
Showing posts with label ஜாலியான அட்வைஸ் கதைகள். Show all posts
Showing posts with label ஜாலியான அட்வைஸ் கதைகள். Show all posts
Wednesday, March 10, 2010
Thursday, October 22, 2009
ஜாலியான அட்வைஸ் கதை - 4
டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால், இன்றைய கோட்டா ஓவர்.
பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.
”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.
மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.
”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.
”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”
அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”
”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.
பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை. கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள். மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.
”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.
மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.
”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.” கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.
”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”
”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”
அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.
”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”
”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”
”எதுக்கு?”
”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.
நீதி
மது அருந்தாதீர்கள். மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்.
Friday, October 16, 2009
ஜாலியான அட்வைஸ் கதை - 3
”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”
சிட்டி சென்டர், பீச், பீட்சா கார்னர் என காலையிலிருந்து தவிர்த்த முத்தம்.
கடைசியாக நைட்ஷோவில் எதிர்பார்த்து கிடைக்காமல் போன முத்தம்.
”முடியாதுன்னா முடியாது”, செல்லச் சிணுங்கலுடன் அவனை தலை கலைத்து இறங்கி நடந்தாள்.
சத்தம் கேட்டு யாரும் விழித்து விடக் கூடாது என்பதற்க்காக தெரு முனையிலேயே மோட்டர் பைக்கை அணைத்திருந்தான் அவன். அதனால் அவளுடைய செல்லச் சிணுங்கல் கூட கூடுதல் டெசிபலில் கான்கிரிட் சுவர்களில் மோதி எதிரொலித்தன.
சன்னமான நிலா வெளிச்சத்தில் அவளது மெல்லிய உதடுகள் ”வா என்னை முத்தமிடு” என்பது போல ஒளிர்ந்தன. பைக்கை ஸ்டாண்டு போட்டு விட்டு சட்டென அவளை அவள் வீட்டு சுவற்றுடன் அழுத்தினான்.
”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”
ஆர்வத்தை மீறிய தயக்கம். தயக்கத்தை மீறிய பயம். கிசு கிசுப்பான குரலில் ”ஹையோ சுவத்துல இருந்து கையை எடு. நான் உள்ள போகணும். யாராவது வந்துட்டாங்கன்னா பிரச்சனையாகிடும்” என்றாள்.
அவன் கையை எடுக்கவில்லை. பள பளவென ஒளிர்ந்த அவளுடைய உதடுகளுக்கும், அவனுடைய உதடுகளுக்கும் 10 மில்லி மீட்டர்தான் இடைவெளி. இருவருக்கும் நெருக்கம் தந்த மயக்கத்தில் அவர்களுடைய மூச்சு காற்று கூட புயல் காற்றைப் போல ஒலித்தது.
”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”
”வேண்டாம். யாராவது பார்த்துடுவாங்க”
”ஒண்ணே ஒண்ணு”
”வேண்டாம் ப்ளீஸ்”
”ஜஸ்ட் ஒரே ஒரு கிஸ்”
”நோ”
”ஏண்டி ராட்சஷி, நோ சொல்ற? அவன் கேட்கிற முத்தத்தை குடுத்து தொலையேன்”
இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள். வாசலில் அவளுடைய அக்கா, தம்பி, அம்மா மற்றும் அப்பா. வீட்டில் எல்லா விளக்குகளும் மள மளவென எரிந்தன. அதிர்ச்சியில் விலகக் கூடத் தோன்றாமல் அவளை சுவற்றுடன் அழுத்தியபடியே நின்றிருந்தான் அவன்.
மிலிட்டரி ரிடையர்டு அப்பா கையில் துப்பாக்கியுடன் சர சரவென அருகில் வந்தார். அவர் கண்களில் கொலை வெறி!
”மரியாதையா அவனை சுவத்துல இருந்து கையை எடுக்கச் சொல்லு. 15 நிமிஷமா காலிங் பெல் அடிச்சுக்கிட்டே இருக்கு”
நீதி :
முத்தம் தர ஏற்ற இடம். காலிங் பெல் இல்லாத இடம். எனவே காலிங் பெல் இருக்கிற இடங்களில் முத்தம் தரவோ, பெறவோ முயற்சிக்காதீர்கள்.
Saturday, May 30, 2009
ஜாலியான அட்வைஸ் கதை - 2
வீட்டுவாடகை, கரண்ட்பில், மளிகை கடை என எக்கச்சக்க செலவு காத்திருக்கிறது. ஆனால் கையில் நயா பைசா இல்லை. சுமதி தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள். கணவன் சுரேஷ் கவலையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
டிங் டாங்
வாசலில் காலிங் பெல் ஒலித்தது. சுமதி ஆடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டே கதவைத் திறந்தாள். வாசலில் ரமேஷ். கணவனின் ஸ்மார்ட்டான நண்பன்.
என்ன என்று அவள் விசாரிப்பதற்குள் அவள் கையில் 5000 ரூபாயை திணித்தான்.
இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு ஒரே ஒரு முத்தம் தருவியா?
ஒரு கணம் யோசித்து அடுத்த கணம் கொடுத்தாள்.
“இச்”
யாரது? கணவன் சுரேஷ் எழுந்து வரவும், ரமேஷ் விரைந்து மறைந்தான்.
உங்க பிரண்டு ரமேஷ் வந்திருந்தார், நீங்க தூங்கறீங்கன்னு சொன்னவுடனே போய்விட்டார்.
”அப்படியா, அவனுக்கு நான் 5000 ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பித் தர வர்றேன்னு சொல்லியிருந்தான். அதைப் பத்தி எதாவது சொன்னானா?”
ஜாலி அட்வைஸ்
கணவர்களுக்கு - மனைவிக்குத் தெரியாமல் யாருக்கும் கடன் தராதீர்கள்
மனைவிகளுக்கு - கணவனுக்குத் தெரியாமல் யாரிடமும் பணம் வாங்காதீர்கள்
(ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்த கதை)
டிங் டாங்
வாசலில் காலிங் பெல் ஒலித்தது. சுமதி ஆடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டே கதவைத் திறந்தாள். வாசலில் ரமேஷ். கணவனின் ஸ்மார்ட்டான நண்பன்.
என்ன என்று அவள் விசாரிப்பதற்குள் அவள் கையில் 5000 ரூபாயை திணித்தான்.
இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு ஒரே ஒரு முத்தம் தருவியா?
ஒரு கணம் யோசித்து அடுத்த கணம் கொடுத்தாள்.
“இச்”
யாரது? கணவன் சுரேஷ் எழுந்து வரவும், ரமேஷ் விரைந்து மறைந்தான்.
உங்க பிரண்டு ரமேஷ் வந்திருந்தார், நீங்க தூங்கறீங்கன்னு சொன்னவுடனே போய்விட்டார்.
”அப்படியா, அவனுக்கு நான் 5000 ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பித் தர வர்றேன்னு சொல்லியிருந்தான். அதைப் பத்தி எதாவது சொன்னானா?”
ஜாலி அட்வைஸ்
கணவர்களுக்கு - மனைவிக்குத் தெரியாமல் யாருக்கும் கடன் தராதீர்கள்
மனைவிகளுக்கு - கணவனுக்குத் தெரியாமல் யாரிடமும் பணம் வாங்காதீர்கள்
(ஏதோ ஒரு வெப்சைட்டில் படித்த கதை)
Thursday, May 28, 2009
ஜாலியான அட்வைஸ் கதை - 1
விடிந்தால் பரிட்சை. ஆனால் விடிய விடிய ஐ.பி.எல் பார்த்ததில் படிக்க முடியவில்லை. நேரத்தை வீணடித்த நண்பர்கள் நால்வரும் ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி பரிட்சை நாளன்று, நால்வரும் சட்டையை அழுக்காக்கிக் கொண்டார்கள். கால்களில் சேற்றை வாரி நனைத்துக் கொண்டார்கள்.
பின்னர் அதே கோலத்துடன் தங்கள் பேராசிரியரை சந்தித்தார்கள்.
”சார், நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு காரில் சென்றிருந்தோம். ஆனால் திரும்பி வரும்போது, நடு இரவில் ஆளில்லாத ஒரு இடத்தில் டயர் வெடித்து கார் நின்று விட்டது. பரிட்சை இருப்பதால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டோம். அதனால்தான் இந்தக் கோலத்தில் இருக்கிறோம்” என்றார்கள்.
அவர்களின் நிலையைப் பார்த்து ஏமாந்த பேராசிரியர் ”உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதனால் மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு மட்டும் தனியாக தேர்வை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
சரியாக மூன்றாவது நாள் அவர்கள் மீண்டும் பேராசிரியரை சந்தித்தார்கள். நீங்கள் ஸ்பெஷல் கேஸ் என்பதால் நால்வரும் தனித்தனி அறைகளில்தான் தேர்வெழுத வேண்டும் என்றார். அதன்படி நண்பர்கள் நால்வரும் தனித் தனி அறைகளில் அமர வைக்கப்பட்டார்கள். கேள்வித் தாள்களும் விநியோகிக்கப்பட்டன. இரண்டே இரண்டு கேள்விகள் தான்.
முதல் கேள்வி
உன் பெயர் என்ன ? ( 2 மதிப் பெண்கள்)
இரண்டாவது கேள்வி
அன்றைய இரவு காரின் எந்த டயர் வெடித்தது? (98 மதிப் பெண்கள்)
1. இடது முன் டயர்
2. இடது பின் டயர்
3. வலது முன் டயர்
4. வலது பின் டயர்
ஜாலி அட்வைஸ்
கூட்டு சேர்ந்து பொய் சொல்லுங்கள். ஆனால் தனியாக மாட்டாதீர்கள்
(இமெயிலில் வந்த கதை)
பின்னர் அதே கோலத்துடன் தங்கள் பேராசிரியரை சந்தித்தார்கள்.
”சார், நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு காரில் சென்றிருந்தோம். ஆனால் திரும்பி வரும்போது, நடு இரவில் ஆளில்லாத ஒரு இடத்தில் டயர் வெடித்து கார் நின்று விட்டது. பரிட்சை இருப்பதால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டோம். அதனால்தான் இந்தக் கோலத்தில் இருக்கிறோம்” என்றார்கள்.
அவர்களின் நிலையைப் பார்த்து ஏமாந்த பேராசிரியர் ”உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதனால் மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு மட்டும் தனியாக தேர்வை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
சரியாக மூன்றாவது நாள் அவர்கள் மீண்டும் பேராசிரியரை சந்தித்தார்கள். நீங்கள் ஸ்பெஷல் கேஸ் என்பதால் நால்வரும் தனித்தனி அறைகளில்தான் தேர்வெழுத வேண்டும் என்றார். அதன்படி நண்பர்கள் நால்வரும் தனித் தனி அறைகளில் அமர வைக்கப்பட்டார்கள். கேள்வித் தாள்களும் விநியோகிக்கப்பட்டன. இரண்டே இரண்டு கேள்விகள் தான்.
முதல் கேள்வி
உன் பெயர் என்ன ? ( 2 மதிப் பெண்கள்)
இரண்டாவது கேள்வி
அன்றைய இரவு காரின் எந்த டயர் வெடித்தது? (98 மதிப் பெண்கள்)
1. இடது முன் டயர்
2. இடது பின் டயர்
3. வலது முன் டயர்
4. வலது பின் டயர்
ஜாலி அட்வைஸ்
கூட்டு சேர்ந்து பொய் சொல்லுங்கள். ஆனால் தனியாக மாட்டாதீர்கள்
(இமெயிலில் வந்த கதை)
Subscribe to:
Posts (Atom)

