Showing posts with label மனம் திரும்புதே. Show all posts
Showing posts with label மனம் திரும்புதே. Show all posts

Friday, November 21, 2014

”மனம் திரும்புதே” நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்!

வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை. அதனால் நிறைய தயக்கம். ஆனால் உங்கள் அழைப்பை மறுக்கமுடியாமல் வந்திருக்கிறேன் என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் நெகிழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் கிஃப்ட். திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பேன் என்றார்.

இனிய அதிர்ச்சியாக தமது பால்யகால நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்திக்கும்போது அனைத்து பிரபலங்களும் இதே போல நெகிழ்ந்துபோகிறார்கள். அந்த வகையில் ”மனம் திரும்புதே” நிகழ்ச்சி எனது பிரியத்திற்கு உரியது.

இது போன்ற மனதைத் தொடும் கான்செப்டுகளை உருவாக்குவதில் நண்பர் கார்மல் எக்ஸ்பர்ட். அவருக்கு ஒரு சபாஷ்!

ஆனால் சம்பந்தப்பட்ட நபர்களை பிரபலங்களுக்குத் தெரியாமலே தேடி சந்தித்து, இரகசியமாக செட்டுக்கு அழைத்துவருகிற பணி மிகவும் கடினமானது. அதை விரும்பிச் செய்கிற குழு இது (அஞ்சனா, பிரபாகர், தட்சிணாமூர்த்தி மற்றும் முரளி). பிரபாகரும் முரளியும் பிரபலங்களைப் பற்றிய குறிப்புகளை தேடித் தொகுப்பார்கள். அவருடைய நண்பர்களை தேடிச் சலித்து தொடர்பு கொள்வார்கள். அஞ்சனா அவர்கள் பற்றிய ஒலி, ஒளி தொகுப்புகளை உருவாக்கி நிகழ்ச்சியை இனிமையாக இயக்குபவர்.

குறிப்பாக தட்சிணாமூர்த்தி. லட்சுமி ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தேடி சென்னை முதல் பாலக்காடு வரை ஒரே நாளில் அபாரமான டிராவல். ஆனால் களைப்பே இல்லாமல் அடுத்த எபிசோடுக்கு தயார் ஆகிவிட்டார். இவர்களுடன் வேலை செய்வதால் நானும் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.

சியர்ஸ் ”மனம் திரும்புதே” டீம்.


”மனம் திரும்புதே” நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்!
சனிக்கிழமை (22.11.14) இரவு 9 மணிக்கு.