Tuesday, September 23, 2008

பாசப் பறவைகள் - சீசன் 2

"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது"
இது கலைஞரின் வசனம். படத்தில் எழுதியது அல்ல, நிஜத்தில் கூறியது.

தினகரன் விவகாரம்
முதன் முதலில் அழகிரிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கருணாநிதியின் மகள் செல்வியும், அவர் கணவரும் செல்வமும்தான். ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கிற அளவுக்கு வாக்குவாதம் சூடாகி, செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.

தினமலர் விவகாரம்
சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜாவுக்குப் பதிலாக, செல்வம் தன்னையே முன் நிறுத்திக் கொண்டார் அல்லது மாறன் சகோதரர்களால் நிறுத்தப்பட்டார். இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நேரடி பாதிப்பு செல்வத்துக்குத்தான்.

தினகரன் விவகாரத்தில் தனது கணவர் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த விஷயத்தில் மிகவும் அப்செட் ஆனார் செல்வி. தற்போது தினமலர் விவகாரத்தில் கணவருக்கே நேரடி பாதிப்பு என்றதும் கலைஞரிடம் மிகவும் கோபித்துக் கொண்டதாகத் தகவல்.

இன்று பெங்களுருவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது", சென்ற முறை செல்வி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கலைஞர் இப்படித்தான் சொன்னாராம்.

இந்த முறையும் அதே டயலாக்கை சொல்வாரா? அல்லது யார் மேலயாவது கோபம்னா நான் இப்படித்தான் செய்வேன் என்று தடாலடியாக எதையாவது செய்வாரா?

கணவருக்கே பாதிப்பா என்று கொதித்துப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகள் செல்வி . . .
தனக்கே பாதிப்பா என்று குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகன் செல்வம் . . .
நமக்கு நேரடி பாதிப்பில்லை என்று நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேரன்கள் மாறன் பிரதர்ஸ் . . .
சின்னப்பசங்களுக்கு இடங்குடுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன் என்று, பொறுமிக்கொண்டிருக்கிறார் மகன் அழகிரி.

பாசப் பறவைகள் சீசன் 2 ஆரம்பித்துவிட்டது என நான் நினைக்கிறேன்.

கைப்புள்ள தாக்குதலால் குழம்பியிருக்கும் விஜயகாந்த் இரசிகர்கள்


"அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால்விடுகிறேன்", என்று சந்து முனைக் கூட்டத்தில் யாரோ ஒரு பேச்சாளர் ஏதோ ஒரு கட்சியின் சார்பில் குவார்டர் அடித்துவிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் (அட கை தட்டுங்கப்பா என்று அவரே அன்பு வேண்டுகோளும் விடுத்தார்)

சந்து முனைக்காரர் அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால் விடுகிற காமெடியெல்லாம் சகஜம். ஆனால் பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி, சந்து முனைக் காரருக்கு சவால் விட்டால் . . .
ஆச்சரியம், கோபம், கையாலாகாத்தனம்,கேவலம் அவ்வளவுதானா என சகல நெகடிவ் உணர்வுகளையும் கலந்து, ஜீரணிக்க முடியாமல்,ஒரு அமெரிக்கன் நொந்து போவானா மாட்டானா?

அப்படி ஒரு நொந்து போன ஒரு மனநிலைதான் விஜயகாந்த் இரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு திடீரென வந்துவிட்டது. கலைஞருடன் மோதல், ஜெயலலிதாவுடன் விளாசல் என ஒண்டிக்கு ஒண்டி பிளந்து கட்டியபோது "அசத்துறான்யா" என விஜயகாந்துக்கு கைதட்டியவர்கள் எல்லாம், வடிவேலு எபிசோடில் பொசுக்கென "நல்லாத்தான போய்க்கிட்டிருந்திச்சி" என கன்னத்தில் கை வைத்து நொந்திருக்கிறார்கள்.

விஜயகாந்த் இரசிகர்களைப் பொருத்தவரை கலைஞரும், ஜெயலலிதாவும் வில்லன்கள். இந்த பிரமாண்ட வில்லன்களின் இடத்தில் இனி ஒரு 'கைப் புள்ளையா'? இனிமேல் இந்த காமெடியன் கூடவா நம்ம தலைவர் மோதணும். ஐயய்ய நல்லால்ல, எப்படியாவது கதையை மாத்துங்க, என்று ஏமாற்றமும் கையாலாகாத்தனமும் மிக்ஸ் ஆகி இரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்கள்.

விஜயகாந்த்தை கலைஞர் முரசொலியில் புரட்டியெடுத்த போதும், ஜெயலலிதா 'குடிகாரன்' என வறுத்தெடுத்த போதும் அவற்றை அனல் பறக்க இரசித்தார்கள். ஏனென்றால் அவர்களுடைய விளாசல்களால் விஜயகாந்தின் மவுசு கூடிக்கொண்டே வந்தது. ஆனால் ஒரு கைப்புள்ளையின் சவால் அவர்களை நிலை குலைய வைக்கிறது. இவன் கூட மோதுனா தலைவருக்கு அசிங்கம், மோதாம விட்டா பங்கம். இப்ப என்னடா செய்யறது?

இதே மனநிலைதான் விஜயகாந்துக்கும். அதனால்தான் கைப்புள்ளையை இயக்குவதும் கருணாநிதிதான் என்று மீண்டும் தி.மு.க மேல் பாய்கிறார். விஜயகாந்தின் சினிமா இரசிகனாக இருந்து அரசியல் ஆதரவாளராக மாறிய அனைவருக்கும் இப்போது குழப்பம். தலைவர் படம் தீடீர்னு ஏன் இப்படி ஆயிடுச்சு? வடிவேலு வில்லனா வெறும் காமெடியனா?

வடிவேலுவை அப்படியே விட்டா பயமிருக்காது. தொட்டா பாப்புலாரிட்டி ஏறிடும். தொடலாமா? வேண்டாமா? கலைஞர் திட்டத்திட்ட நம்ம தலைவருக்கு மவுசு ஏறின மாதிரி, நம்ம தலைவர் திட்டத் திட்ட ஒரு கைப்புள்ள பாப்புலர் ஆகுதே. தலைவரையே ஜெயிப்பேன்னு சவால் விடுதே. இப்ப என்ன பண்றது? தொடலாமா? கூடாதா?

ஸ்ஸ்ஸ்.... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

இன்றைக்கு விஜயகாந்த் இரசிகர்களின் மனநிலை இதுதான்

Monday, September 22, 2008

வடிவேலு மோதலால் வயசுக்கு வந்திருக்கும் புது மொட்டு விஜயகாந்த்

திடீரென நாணிக் கோணி பேச ஆரம்பித்தால்
அந்தப் பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்று அர்த்தம்
திடீரென மாற்றி மாற்றிப் பேசினால்
அந்த அரசியல்வாதி வயசுக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

காதல் படத்தில் ஹீரோ பரத் மோதியவுடன், ஹீரோயின் சந்தியா சட்டென வயசுக்கு வந்து விடுவார். அதே போல சினிமா காமெடியன் வடிவேலு ஒரு ஹீரோவைப் போல மோதியதும், அரைகுறை விஜயகாந்த் ஒரு ஹீரோயின் போல விசுக்கென முழு அரசியல்வாதியாக பூப்பெய்திவிட்டார்.

வடிவேலு மோதலை (அகில உலகமும் எதிர்பார்த்தது போல) கருணாநிதியின் சதி என்று அவர் சன் நெட்வொர்க்கில் அளித்த பேட்டி சூப்பர் காமெடி.

புதுசாக வயசுக்கு வந்திருக்கும் அரசியல்வாதி விஜயகாந்தின் பல்டிக்கு சில சாம்பிள்கள்.

அன்று
யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். கூட்டணி வைத்தால் ஊழல்தான் பெருகும்.

இன்று
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் கூட்டணி வைப்பேன்.(கையெழுத்தெல்லாம் வாங்காம, கம்யூனிஸ்டுகளுடன் ஏற்கனவே பேச ஆரம்பிச்சிட்டாரு)

அன்று
குடும்ப அரசியல் செய்ய மாட்டேன்.
இன்று
மச்சினன் சுதிஷிம், மனைவி பிரேம லதாவும் கட்சிக்கு உழைப்பதில் என்ன தவறு?

அன்று
பவர்கட்டுக்கு காரணம் மின்வெட்டு ஆற்காடு வீராசாமியின் திறமைக் குறைவுதான்
இன்று
எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் என எனக்கு செய்தி வந்துள்ளது.

அன்று
(சென்ற வருடம்) வடிவேலு குடித்துவிட்டு கலாட்டா செய்கிறார்
இன்று
வடிவேலு விவகாரம் கருணாநிதியின் திட்டமிட்ட சதி

அன்று
கருணாநிதியைப் போல எனக்கு பதவி ஆசை கிடையாது
அன்றே
2011ல் நான் முதலமைச்சர் ஆவேன்