Showing posts with label #மல்லிகைக்கிழமை. Show all posts
Showing posts with label #மல்லிகைக்கிழமை. Show all posts

Friday, October 30, 2015

#மல்லிகைக்கிழமை


காற்றின் திசையை
மல்லிகைக்கு தந்துவிட்டு
நீ பார்க்கும் திசையெங்கும்
எனை வீசியடிக்கிறாய்.

Friday, October 23, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬


மல்லிகையைப் போல்
சிரிக்கிறாள் அவள்!
அவளைப் போல
மணக்கிறது மல்லிகை!


Friday, October 9, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬



மல்லிகையால் தன் முகம் செய்து 
கூந்தலில் அணிகிறாளோ! 
அவள் சூடியிருக்கும் மல்லிகை 
என்னை பார்க்கும்போதெல்லாம் 
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Friday, October 2, 2015

#மல்லிகைக்கிழமை


கண்ணாடி பார்த்து மல்லிகை சூடும்போது
அவள் தன்னைப் பார்ப்பது போல்
இரகசியமாய் என்னைப் பார்க்கிறாள் என்பது
பின்னால் நிற்கும் எனக்கும் தெரியும்
என்னை வரவழைத்த மல்லிகைக்கும் தெரியும்.
#மல்லிகைக்கிழமை

Saturday, September 26, 2015

#மல்லிகைக்கிழமை



அவள் கழுத்துக் கதகதப்பில் 

ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!

Friday, September 4, 2015

#மல்லிகைக்கிழமை

அவள் கூந்தலில் மயங்கிய 
பூக்கள் சரியாமலிருக்க
ஹேர் பின்களையும்,
அவள் கூந்தல் மயக்கிய 
நான் சரியாமலிருக்க
தன் கண்களையும் பிரயோகிக்கிறாள்.

#மல்லிகைக்கிழமை

Friday, May 22, 2015

‪#‎மல்லிகைக்கிழமை‬

ஒரே சரத்திலிருந்து
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
‪#‎மல்லிகைக்கிழமை‬

Friday, March 20, 2015

#மல்லிகைக்கிழமை



நான் எத்தனை தொலைவில் இருந்தாலும்
என்னை கூந்தல் எல்லைக்குள் இழுத்து வருகின்றன  
அவள் சூடும் மல்லிகைச் சரங்கள்!
#மல்லிகைக்கிழமை