Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts
Friday, January 26, 2024
#மல்லிகைக்கிழமை
Labels:
love,
Romance,
மல்லிகைக்கிழமை
Wednesday, January 24, 2024
Friday, October 30, 2015
#மல்லிகைக்கிழமை
காற்றின் திசையை
மல்லிகைக்கு தந்துவிட்டு
நீ பார்க்கும் திசையெங்கும்
எனை வீசியடிக்கிறாய்.
Friday, October 23, 2015
Friday, October 9, 2015
#மல்லிகைக்கிழமை
மல்லிகையால் தன் முகம் செய்து
கூந்தலில் அணிகிறாளோ!
அவள் சூடியிருக்கும் மல்லிகை
என்னை பார்க்கும்போதெல்லாம்
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
#மல்லிகைக்கிழமை
கூந்தலில் அணிகிறாளோ!
அவள் சூடியிருக்கும் மல்லிகை
என்னை பார்க்கும்போதெல்லாம்
அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்!
#மல்லிகைக்கிழமை
Friday, October 2, 2015
Saturday, September 26, 2015
#மல்லிகைக்கிழமை
அவள் கழுத்துக் கதகதப்பில்
ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!
#ப்ரியம் என்பது
#ப்ரியம் என்பது
ரயில் நிலையத்தில் யாரையோ தேடும் பாவனையில்
நான் உன்னையே சுற்றிச் சுற்றி வருவதும்,
தோழிகளிடம் விடைபெறும் பாவனையில்
நீ என்னிடம் கையசைத்து விடைபெறுவதும்.
Friday, September 4, 2015
Monday, August 31, 2015
#ப்ரியம் என்பது
#ப்ரியம் என்பது
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.
திரையரங்க இருளில் வரிசை எண் தேடும்போது
அனிச்சையாக நீ என் கரம் பற்றிக்கொள்வதும்
சலனப்படம் முடிந்து இருள் கலையும்வரை
பற்றிய உன் கரங்களை நான் விடாதிருப்பதும்.
Thursday, August 20, 2015
#ப்ரியம் என்பது
#ப்ரியம் என்பது
அவள் தோளிலிருந்து அருவி போல் சரியும் துப்பட்டாவை
தயக்கத்துடன் நான் நேர் செய்வதும்.
உதடு கடித்தபடி ஈர மருதாணி விரல்களால்
வெட்கத்துடன் அவள் என் கன்னம் கிள்ளுவதும்.
Wednesday, August 19, 2015
#ப்ரியம் என்பது
#ப்ரியம் என்பது
கடற்கரை மணலில் கிறுக்கிய உன்பெயரை
யாரும் பார்க்கும் முன்
நான் கலைப்பதும்,
உள்ளங் கைகளில் கிறுக்கிய என் பெயரை
யாரும் பார்க்கும் முன்
முத்தமிட்டு நீ பொத்தி வைப்பதும்.
Friday, May 22, 2015
#மல்லிகைக்கிழமை
ஒரே சரத்திலிருந்து
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
#மல்லிகைக்கிழமை
மணப்பது எது மயக்குவது எது
என எப்படியோ தரம் பிரித்து,
மணக்கும் மல்லிகையை
சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு
மயக்கும் மல்லிகையால்
என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்!
#மல்லிகைக்கிழமை
Thursday, May 14, 2015
#ப்ரியம் என்பது
#ப்ரியம் என்பது
மழைதான் ஆனால் கவலையில்லை என்று
நான் ஃபோனில் சொல்லிக் கொண்டிருப்பதும்,
உன் துப்பட்டா குடைக்குள்
மழை நனைக்காமல்
என்னை நீ அணைத்திருப்பதும்.
Sunday, April 26, 2015
Wednesday, April 15, 2015
Friday, March 20, 2015
Thursday, March 19, 2015
Wednesday, March 11, 2015
#ப்ரியம் என்பது
நண்பர்கள் விடைபெறட்டும் என
நம் தனிமைக்காக
நான் காத்திருப்பதும்.
நம் தனிமைக்காக
நான் காத்திருப்பதும்.
Subscribe to:
Posts (Atom)













