Showing posts with label jeyamohan. Show all posts
Showing posts with label jeyamohan. Show all posts

Tuesday, April 30, 2024

ஜெயமோகனும் கண்ணதாசனும்!

அழைப்பு!

ஜெயமோகனின் பிரமாதமான சிறுகதை! இன்று காலையில் வாசித்தேன். ஆழமான அறிவியல் புனைவு. மனோஜ்நைட் ஷியாமளன் இக்கதையை வாசித்தால் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிடுவார்.
“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்கிறது இந்தக் கதை. இதுதான் நான் இயக்கியிருக்கும் ”யாதெனக்கேட்டேன்” திரைப்படத்தின் மையப் புள்ளி. அவர் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு வெளியைப் படைத்து அறிவியல் புனைவாக எழுதியிருக்கிறார். நான் ஒரு குடும்பக் கதைக்குள் இந்த சிந்தனையை பொருத்த முயற்சி செய்திருக்கிறேன்.
மிகவும் நுட்பமான இந்தச் சிந்தனையை கதையாக எழுதும்போது மையப்புள்ளியிலிருந்து எதைநோக்கி கதையை செலுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வேண்டும். அதனை நான் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையிலிருந்து பெற்றேன்.
ஜெயமோகனின் இந்தக் கதையை வாசித்துவிட்டு, கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் கவிதையை வாசியுங்கள், அல்லது கண்ணதாசனிலிருந்து ஜெயமோகனுக்குச் செல்லுங்கள். யாதெனக்கேட்டேன் திரைப்படம் இவ்விரு சூரியன்களின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
என் நீண்ட நண்பர்கள் பட்டியலில் சிலர் மட்டும் யாதெனக்கேட்டேன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் யாதெனக்கேட்டேன் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளியாகும்.
ஜெயமோகனின் அழைப்பு சிறுகதை முதல் கமெண்டில் உள்ளது. அடுத்த கமெண்டில் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையை கொடுத்திருக்கிறேன்.