Showing posts with label actor isr. Show all posts
Showing posts with label actor isr. Show all posts

Thursday, July 25, 2024

சித்ரா லட்சுமணனுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கா?


சார் வணக்கம்! நல்லா இருக்கீங்களா?

நேற்று இனிய ஆச்சரியமாக சித்ரா லட்சுமணன் அழைத்தார். நான் வணக்கம் சொல்வதற்கு முன், மளமளவென்று அவருடைய பாணியில் நலம் விசாரித்தார்.
அப்பாவின் திரைப் பெயர் ஐ.எஸ்.ஆர், முழுப்பெயர் ஐ.எஸ்.ராமச்சந்திரன்தானே என்றார்.
ஆமாம் சார், என்ன விஷயம் என்றேன்.
அப்பாவின் முழுப்பெயரைக் கேட்டு கேள்வி வந்திருக்கிறது. அதனால் முழுப்பெயரை உறுதி செய்வதற்காக உங்களை அழைத்தேன் என்றார்.
இரண்டு ஆச்சரியங்கள். இன்னமும் யாரோ ஒருவர் எங்கள் தந்தையை நினைவு வைத்திருக்கிறார். அதைவிட ஆச்சரியம், கூகுள், விக்கிபீடியாவைத் தேடி பதில் தராமல், மெனக்கெட்டு குடும்பத்தாரை அழைத்து உறுதி செய்து கொண்ட திரு. சித்ரா லட்சுமணன்.
”எப்படியெல்லாம் கேள்விகள் வருது பாருங்க”, என்றார்.
”சார் அந்தக் கேள்விகள் உங்களிடம் வருவதற்கு காரணமே, நீங்கள் எப்படியும் (உறுதி செய்யப்பட்ட) பதில் தந்து விடுவீர்கள் என்று நாங்கள் எல்லோருமே நம்புகிறோம்”, என்றேன்.
ஆபிஸ் வாங்க, என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
விரைவில் சந்திப்பேன். அவரிடம் கேட்பதற்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் பதில்கள் வாங்கி வருகிறேன்.

Tuesday, April 30, 2024

ஜெயமோகனும் கண்ணதாசனும்!

அழைப்பு!

ஜெயமோகனின் பிரமாதமான சிறுகதை! இன்று காலையில் வாசித்தேன். ஆழமான அறிவியல் புனைவு. மனோஜ்நைட் ஷியாமளன் இக்கதையை வாசித்தால் அடுத்த படத்துக்கு ஸ்க்ரிப்ட் தயார் செய்துவிடுவார்.
“நாம் நம்மையன்றி எதையும் அறிந்ததில்லை” என்கிறது இந்தக் கதை. இதுதான் நான் இயக்கியிருக்கும் ”யாதெனக்கேட்டேன்” திரைப்படத்தின் மையப் புள்ளி. அவர் முழுக்க முழுக்க கற்பனையான ஒரு வெளியைப் படைத்து அறிவியல் புனைவாக எழுதியிருக்கிறார். நான் ஒரு குடும்பக் கதைக்குள் இந்த சிந்தனையை பொருத்த முயற்சி செய்திருக்கிறேன்.
மிகவும் நுட்பமான இந்தச் சிந்தனையை கதையாக எழுதும்போது மையப்புள்ளியிலிருந்து எதைநோக்கி கதையை செலுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் வேண்டும். அதனை நான் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையிலிருந்து பெற்றேன்.
ஜெயமோகனின் இந்தக் கதையை வாசித்துவிட்டு, கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் கவிதையை வாசியுங்கள், அல்லது கண்ணதாசனிலிருந்து ஜெயமோகனுக்குச் செல்லுங்கள். யாதெனக்கேட்டேன் திரைப்படம் இவ்விரு சூரியன்களின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
என் நீண்ட நண்பர்கள் பட்டியலில் சிலர் மட்டும் யாதெனக்கேட்டேன் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் என் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் யாதெனக்கேட்டேன் உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளியாகும்.
ஜெயமோகனின் அழைப்பு சிறுகதை முதல் கமெண்டில் உள்ளது. அடுத்த கமெண்டில் கண்ணதாசனின் ”யாதெனக்கேட்டேன்” கவிதையை கொடுத்திருக்கிறேன்.

Wednesday, August 24, 2022

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

 

ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?

தனபால் - விழுப்புரம்
ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 27 வரை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியாக அனுப்பலாம். அதற்கான ஆன்லைன் இணைப்புகள் ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் (ISR Ventures) நிறுவனத்தின் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் வெளியாகும். ஏற்கனவே தொடர்பில் உள்ளோருக்கு வாட்சப் வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9962295636 என்ற எண்ணுக்கு வாட்சப் அனுப்புங்கள்.

Sunday, July 10, 2022

அசர வைக்கும் கே.பாலச்சந்தர் அறிமுகங்கள் - குற்றால அருவி முதல் சூப்பர் ஸ்டார் வரை

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அறிமுகங்கள்.

இருமல் தாத்தா முதல், குற்றாலம் அருவி வரை ஒரு பட்டியல் போட்டால் அவருடைய அறிமுகங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இருப்பார், என் தந்தை ஐ.எஸ்.ஆரும் இருக்கிறார்.


இது இயக்குநர் சிகரத்தின் நிகரற்ற சாதனை. இன்னும் அடுத்த 100 வருடங்களுக்கு அவருடைய அறிமுகங்கள் திரை உலகை ஆட்சி செய்வார்கள். 

நான் இயக்கியுள்ள யாதெனக்கேட்டேன் சிறப்புக்காட்சி பார்த்த சிலர், சில இடங்களில் பாலசந்தர் டச் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். அவருடைய படம் பார்த்து வளர்ந்தவர்களிடம் இந்த டச் இயல்புதான். தவிர்க்கவே முடியாமல் தலைவர் பாலச்சந்தர் நம்மை உள்ளுக்குள் இருந்து இயக்குவார்.

இந்த வீடியோ கே.பி பட டியூன்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு மாஷப். இதில் அவருடைய அறிமுகங்கள் டைட்டில் அனிமேஷனாக உள்ளது. கே.பி மறைந்த தினத்தில் நண்பர் ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் முரளியுடன் அமர்ந்து இந்த வீடியோவை உருவாக்கினோம்.

இன்று என் நண்பரும் இல்லை. இயக்குநர் சிகரமும் இல்லை. எனவே இயக்குநர் சிகரம் கே.பி மற்றும் நண்பர் முரளி ஆகியோரின் நினைவாக இந்த வீடியோவை பகிர்ந்து கொள்கிறேன். காலம் மட்டும் உதவியிருந்தால் இருவருக்குமே யாதெனக்கேட்டேன் படத்தை திரையிட்டுக் காண்பித்து மகிழ்ந்திருப்பேன்.

Love and respects to KB Sir, My dad ISR and dear friend Murali.

#KBalachander #ActorISR #Murali