Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Sunday, August 21, 2022

தோழமை அமைப்பின் ஆதரவுடன் ISR 5 நிமிட குறும்படப்போட்டி

 


ISR 5 நிமிட குறும்படப் போட்டி! கை கொடுத்திருக்கும் ”தோழமை” அமைப்பு!

போட்டியின் மையக்கரு ”குழந்தைகள் உரிமை - CHILD RIGHTS" என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே அமைப்பின் தலைவர் தேவநேயன் தொடர்பு கொண்டார்.

குழந்தைகள் உரிமை என்றால் என்ன? என்பது பற்றி யுனிசெஃப் என்ன கூறியிருக்கிறது என்பதை அழகான தமிழ் விளக்கங்களுடன் அனுப்பி வைத்தார். போட்டி ஆரம்பித்தபின் போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை பற்றி எடுத்துச் சொல்லவும் ஒப்புக் கொண்டுள்ளார்.


எனவே குழந்தைகள் உரிமை பற்றி சந்தேகம் உள்ள போட்டியாளர்கள் அவருடைய ஆலோசனையை கேட்டுக் கொண்டு ஸ்கிரிப்ட் எழுதத் துவங்கலாம். இதற்கான ஒரு ஆன்லைன் சந்திப்பை ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும். தோழமைகள் அமைப்பு இதில் மிக மிக முக்கியப்பங்காற்றும். அவர்களுடைய ஆலோசனையும், ஆதரவும் குழந்தைகள் உரிமை பற்றி மிகத் தரமான தெளிவான படங்களை எடுக்க உதவியாக இருக்கும்.

போட்டியைப் பற்றியும், அது என்று நிறைவுக்கு வரும் என்பதையும், பரிசுகள் என்னென்ன என்பதையும் விரைவில் அறிவிக்கிறோம்.

மீண்டும் ஒரு முறை துணையாக கை கொடுத்திருக்கும் தோழமை அமைப்புக்கு நன்றி!

#Thozhamai #TNOU #MovieWood #StellaMaris #ISRventures #isr5minuteshortfilmcontest

Saturday, December 10, 2011

ராஜா-வாலி-மனசு-இசை

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.

ஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.

சுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.

என்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு  இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

தீம் மியூசிக் - 1 


தீம் மியூசிக் - 2



இசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.

காற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.