Showing posts with label Rajini. Show all posts
Showing posts with label Rajini. Show all posts

Sunday, September 14, 2025

கூலி சர்ச்சை: ரஜினி-ஆமிர் கூட்டணி

 நான் ரஜினிகாந்த் மற்றும் ஆமிர் கான் ஆகிய இருவரின் தீவிர ரசிகன். இருவரும் இந்திய சினிமாவின் மாபெரும் கலைஞர்கள். அவர்களின் திறமையும், அர்ப்பணிப்பும், திரையில் கொண்டு வரும் மேஜிக்கும் எப்போதும் என்னை கவர்ந்தவை. இவர்கள் இருவரும் இணையும் கூலி படத்தை எதிர்பார்த்தபோது, என் மனதில் ஒரு பெரிய ஆரவாரமே ஓடியது. ஆனால், படம் பார்த்த பிறகு, அவர்களுக்கு இடையிலான காட்சிகள் என்னை ஏமாற்றமடையச் செய்தன. லோகேஷ் கனகராஜின் எழுத்து மிகவும் சுமாராக இருந்தது. இந்தியாவின் இரு மாபெரும் நட்சத்திரங்களை வைத்து இப்படி ஒரு சாதாரண காட்சிகளை உருவாக்கியது ஏன் என்று தோன்றியது.


ஆனால், சமீபத்தில் ஒரு புயல் போல பரவிய ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆமிர் கான், கூலி படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசியதாகவும், படத்தின் எழுத்து மோசமாக இருந்ததாகவும், இது ஒரு "பெரிய தவறு" என்று கூறியதாகவும் ஒரு செய்தித்தாள் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு நொடி நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆமிர் கான், ரஜினியை மிகவும் மதிக்கக் கூடியவர். பல பேட்டிகளில் அவர் ரஜினியின் மீது தனக்கு உள்ள மரியாதையையும், அன்பையும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர், படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பாரா? ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

இப்போது ஆமிர் கானின் குழு அதிகாரபூர்வமாக இந்த செய்தியை மறுத்திருக்கிறது. "ஆமிர் கான், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படக் குழுவை மிகவும் மதிக்கிறார். படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது, இது படத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது," என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த மறுப்பு என் மனதை ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இந்த சர்ச்சை மூலமாக மற்றொரு முக்கியமான விஷயம் என் கவனத்தை ஈர்த்தது - ஊடகங்களின் தரமிழப்பு.

இந்தப் பொய்ச் செய்தியை எந்த ஆதாரமும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் கூட வெளியிட்டது என்னை அதிரவைத்தது. ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லையா? இப்படி பரபரப்புக்காக மட்டுமே செய்திகளைப் பரப்புவது, ஊடகங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இது மிகவும் கவலை தரும் விஷயம்.

லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சின்ன அறிவுரை. ரஜினியின் பெயரை வைத்து, இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை ஈர்த்து, அவர்களை சுமாரான காட்சிகளில் நடிக்க வைப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் மரியாதைக் குறைவு. எதிர்காலத்தில் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ரசிகர்களாகிய எங்களுக்கு, இப்படி ஒரு மாபெரும் கூட்டணியைப் பார்க்கும்போது, பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும், சுமாரான காட்சிகளாக அல்ல.

நீங்களும் இந்த சர்ச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஊடகங்கள் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!

- ISR Selvakumar
Grok AI எனது சார்பில் எழுதியுள்ள வலைப்பூ இது
தற்போது Grok AI என்னைப் போல் பயிற்சி தந்து வருகிறேன்

Sunday, April 7, 2024

ஏ.ஐயில் (சிறுவன்) எஸ்.பி முத்துராமன்!

 


ஏ.ஐயில் சிறுவன் எஸ்.பி முத்துராமன்.

எப்போது சந்தித்தாலும் மறைந்த எங்கள் தந்தை #ISR பற்றிய ஞாபகங்களை பகிர்ந்து கொள்வார். குடும்பத்தார் அனைவரையும் பற்றியும் அக்கறையுடன் விசாரிப்பார். குடும்ப விழாவிற்கு அழைத்தால் மறக்காமல் உடனே தனது டைரியில் குறித்துக் கொள்வார். நேரில் வந்து வாழ்த்துவார். இந்த எளிய மனிதரா சூப்பர் ஸ்டாரை வைத்து 25 படங்கள் இயக்கினார் என்று எப்போதும் வியக்க வைப்பார்.
"ஏ.வி.எம் தந்த எஸ்.பி.எம்" என்ற புத்தகத்தில் உள்ள அவரது சிறுவயது புகைப்படத்தை ஏ.ஐயால் உயிர் பெறச் செய்திருக்கிறேன். கடந்த அவருடமே அவருக்கு இதனை அனுப்பிவிட்டேன். ஆர்வத்துடன் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று அவரது 89வது பிறந்தநாள். அவருக்கு எங்கள் குடும்பத்தார் சார்பில் வாழ்த்துக்கள்! வாழ்க எஸ்.பி.எம்!
- ISR Selvakumar

Wednesday, June 22, 2022

ரஜினி முகமே இல்லாமல் ரஜினி பட போஸ்டர் அறிமுகம்.

Rajini's Jailer first look poster
இதற்கு முன்பு இப்படி வெளியானதில்லை என நினைக்கிறேன். அவருடைய அடுத்த படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் இரத்தம் படிந்த ஒரே ஒரு கத்திதான் இருக்கிறது.

கமல் நடித்த விக்ரம் பட வெற்றிதான் இந்த போஸ்டருக்கு காரணமாக இருக்குமோ என எனக்குத் தோன்றுகிறது. விக்ரம் படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி இரத்தம் தெறித்தது. இரசிகர்களும் அதற்கு அமோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கபாலியைத் தவிர ரஜினி படங்களில் இந்த அளவுக்கு வன்முறைக் காட்சிகள் இருந்ததில்லை. ஆனால் ஜெயிலர் படம் விக்ரமைப் போலவே ஆக்சன் மசாலாவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாற்றத்திற்கு ரஜினி இரசிகர்களின் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். விக்ரம் வெற்றி பெற்ற பின் நெல்சனை பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். லோகேஷ் கமலை பயன்படுத்தியது போல விஜய்யை பீஸ்ட் படத்தில் பயன்படுத்தவில்லை என்று விஜய் இரசிகர்கள் ஒரு பக்கம் வறுத்தெடுத்தெடுத்தார்கள். மறு பக்கம் ரஜினி இரசிகர்கள், தலைவரை வேஸ்ட் பண்ணிடாத, விக்ரம் போல அதிரடியாக இருக்கணும் என்று ஆன்லைனில் நெருக்கடி தந்திருப்பார்கள்.
லோகேஷே ஒரு பேட்டியில் இது பற்றி வருத்தப்பட்டார். நெல்சனுக்கு தேவையில்லாத நெருக்கடி கொடுப்பதாக அவர் பேட்டியில் குறிப்பிட்டார். அந்த நெருக்கடியின் விளைவுதான் இரத்தம் படித்த கத்தி ஜெயிலர் போஸ்டராக வெளி வந்திருக்கிறது.
படம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஆனால் போஸ்டர் இரசிகர்களை இரத்தம் பார்க்கத் தயாராக இருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.
இப்போதைக்கு ஜெயிலர்கள் இரசிகர்கள்தான். ரஜினியும், நெல்சனும் கைதிகளாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
- ISR Selvakumar

Saturday, March 1, 2014

வீட்டிலிருந்தபடியே ரஜினியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் விளம்பர டெக்னிக்

ஒருவழியாக கோச்சடையான் டீம் நவீன விளம்பர டெக்னிக்கை கண்டுபிடித்துவிட்டது. இனி படம் வெளியாவதில் உள்ள தயக்கம் குறையும் என்று நினைக்கிறேன்.

INGAGE என்ற நவீன 4D டெக்னிக்கை கார்போன் ஃபோன் நிறுவனத்துடன் கோச்சடையான் அறிமுகப்படுத்துகிறது. INGAGE என்பது 3D அனிமேஷன்களையும், (ரியலாக)நம்மையும் இணைக்கும் நவீன 4D. 


அனிமேஷனில் தோன்றும் 3D கோச்சடையான் ரஜினியும், நாமும் ஒன்றாக நின்று இன்ஸ்டன்ட் 4D போட்டோ எடுத்துக் கொள்ளும் விளம்பர டெக்னிக். ரஜினியைப் போலவே சூப்பர்.


ரஜினியை 3Dயில் தோன்றச் செய்வது எப்படி?
  • INGAGE என்ற Appஐ கூகுள் ஸ்டோரில் இருந்து Download - Install and Run
  • பிறகு இடப்பக்கத்தில் உள்ள விளம்பரத்தை உங்கள் ஃபோனால் ஸ்கேன் பண்ணுங்கள்
  • ரஜனி 3Dயில் உங்கள் ஃபோனில் தோன்றுவார். அவர் கூட நீங்களும் நின்று கொள்ளலாம்.
  • அதனை அப்படியே ஒரு ஃபோட்டோவாக நீங்கள் க்ளிக்கிக்கொள்ளலாம்.
  • இந்தப்படத்தை பிரிண்ட் செய்தும் ஸ்கேன் செய்யலாம். 
கீழே உள்ளவை என் டெஸ்க்டாப்பிலும், பேப்பரிலும் ஸ்கேன் செய்து நான் க்ளிக்கிய சில ஃபோட்டோக்கள். 



இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இந்தியா முழுவதும் பேனர் வைக்கப்

போகிறார்களாம். அதன் முன் நின்று நீங்கள் ஸ்கேன் செய்தால் உங்கள் உயரத்திற்கு ரஜினி தோன்றுவார், நடனமாடுவார், பேசுவார். நீங்களும் உடன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்.