Friday, March 2, 2007

Word play - Palindromes

"Damn! I, Agassi, miss again! Mad!"

"To Idi Amin: I'm a idiot!"

"No, Mel Gibson is a casino's big lemon."

"So, G. Rivera's tots are Virgos. "

"Sis, ask Costner to not rent socks "as is.""

"E. Borgnine drags Dad's gardening robe."

"Toni Tennille fell in net. I, not!"

"T. Eliot nixes sex in toilet."

"O, Geronimo; no minor ego."

"Plan no damn Madonna LP! "

"Yawn. Madonna fan? No damn way!"

"Wonder if Sununu's fired now."

"So… Mariah Carey, a LP, a player… a chair, Amos!"

"Drat Sadat, a dastard!"

"Drat Saddam, a mad dastard!"

"Oh, no! Don Ho!"

"Sir, a plan, a canal; Paris."

I don't remember the site, but that's really a wonderful weblink with full of palindromes

Thursday, March 1, 2007

Budget - Jokes

Usha mami, decided it was time to trim her household budget wherever possible, so rather than having her dress in a washing machine, she washed it by hand.

Proud of her savings, she boasted to her husband Kicha mama, "Just think, honey, we're eight dollars richer because I washed my dress by hand."

"Good," her husband Kicha mama replied. "Wash it again!"

- - - -

MOST IMPORTANT PROFESSION

Kicha mama, the economist, had a debate with two other professionals, an architect and a surgeon.

The surgeon said, 'Look, we're the most important. God's a surgeon because the very first thing God did was to extract Eve from Adam's rib.'

The architect said, 'No, wait a minute, God is an architect. God made the world in seven days out of chaos.'

Kicha mama, the economist smiled, 'And who made the chaos?'

- - - - -

Usha mami once asked Kicha mama, the great economist, for his office phone number and he gave her an estimate.

Wednesday, February 21, 2007

முத்தம்

தந்தால் திருப்பித் தருகிறேன்
தராவிட்டால் நானே தருகிறேன்
முத்தம்

Monday, February 12, 2007

எப்போதும் அவள் . . .

அவளுக்காக பூங்காவில்
கர்திருந்தேன்
அவளுக்காக கோவிலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பள்ளிக்கூட வாசலில்
கர்திருந்தேன்
அவளுக்காக பஸ்நிறுத்தத்தில்
கர்திருந்தேன்

ஆனால் அவள் எப்போதும்
ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால்
தோன்றி மறைந்துவிடுகிறாள்

Saturday, February 10, 2007

காதல் பிரார்த்தனை


கடவுளே!

தூரிகையைக் கொடு
அவளை ஓவியமாகத் தீட்டுகிறேன்.

ஸ்வரங்களைக் கொடு
அவளை இசையாகப் பாடுகிறேன்

வார்த்தைகளைக் கொடு
அவளை கவிதையாக வடிக்கிறேன்

உளியைக் கொடு
அவளை சிற்பமாக செதுக்குகிறேன்.

விருப்பமில்லாவிட்டால்
காதலைக் கொடு
எல்லாவற்றையும் செய்கிறேன்.

Friday, February 9, 2007

காதல் அதிசயம்

அதிசயம் - 1
கண்ணை மூடிக்கொண்டு வலது கை சுட்டு விரலால் நுனி மூக்கை தொட முடிந்தால், அழகான யாரோ உங்களை காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

அதிசயம் - 2
முதல் அதிசயத்தைப் படித்த அனைவருமே கண்ணை மூடிக்கொண்டு மூக்கைத் தொட முயற்சித்திருப்பீர்கள்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

அதிசயம் - 3
முதல் அதிசயம் வெறும் கப்சா.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அதிசயம் - 4
காதலிக்காத எல்லோருமே காதல் எப்படி வந்தாலும், கப்சா என்றுதான் சொல்வார்கள்.

முத்தம்


கொடுத்த முத்தத்தை விட
கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம்.

முத்தமிட்டது சில வினாடிகளே!
முத்தம் தந்த பரவசம்
தினம் தினம்.

சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன்
அவளை முத்தமிட.
ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன்
முதல் முத்தம்.


முதலில் கை
பின் கன்னம்
அப்புறம் உதடுகள்
இந்த வரிசையில் முத்தமிட நினைத்தேன்.
அவள் என் உதடுகளை கவ்வியதும்
எல்லாமே மாறிப்போனது.

Thursday, February 8, 2007

தாமிரபரணி - திரைவிமர்சனம


ஆக்சன் காரம் பூசிய பேமிலி ஐஸ்கிரீம்.
மனைவியை பிரிந்து வாழும் தூத்துக்குடி உப்பு வியாபாரி - பிரபு, அவருடைய தங்கை ரோகிணியின் மகன் - விஷால். தனது மாமா பிரபுவை தெய்வமாக நினைக்கிறார். பிரபுவிற்கு ஏதாவது என்றால் அரிவாளை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்.
ஒரு கட்டத்தில் பிரபு தனது மனைவியை பிரிந்ததற்க்கு காரணமே தான் எனத் தெரியும்போது அதிர்கிறார். அது வரையில் விளையாட்டுப் பிள்ளையாக திரியும் விஷால்(படத்தில் அவர் பெயர் கெட்டவன்), பொறுப்பான பையனாக மாறி தனது மாமா பிரபுவின் வாழ்க்கை சீராக போராடுகிறார். அப்போது அவரும் அவருடைய குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளும், போராட்டங்களும்தான் கதை.


விஷால் போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கு ஏற்ற கதை. கொஞ்சம் பெரிய நடிகரை போட்டிருந்தால் கூட தியேட்டர் காலியாகியிருக்கும். (உதாரணமாக விக்ரம் நடித்த மஜா, நல்ல படம் என்றாலும் இது போன்ற படம் விக்ரம் போன்ற பெரிய நடிகர்களுக்கு சறுக்கலைத் தரும்.) இயக்குனர் Hari கதாநாயகனாக விஷாலை தேர்வு செய்ததிலேயே பாதி ஜெயித்துவிட்டார்.

துணைக்கு பிரபு (பாந்தமான நடிப்பு, ரொம்ப நாளைக்கப்புறம் 'விக்' சரியாக செட் ஆகியிருக்கிறது) மற்றும் நதியா (நல்ல கதாபாத்திரம் - கோபக்கார இளம் அம்மாவாக கச்சிதமாக நடித்திருக்கிறார்). நாசர் வழக்கமான வில்லன்(பாவம் அவருடைய திறமைக்கு தீனி இல்லை)

நயனதாராவை ஞாபகப்படுத்தும் புதுமுக நாயகி. வேஸ்ட். விஷால் இதில் புதிதாக எதையும் செய்யவில்லை. இருந்தாலும் கதையோட்டம் காரணமாக அலுக்காமல் அவரை பார்க்க முடிகிறது.

அமரன் படத்தில் வரும் ஐசாலக்கடி மெட்டுதானுங்க பாடலையும், கற்பூர நாயகியே என்ற எல்.ஆர்.ஈஸ்வரியிலன் அம்மன் பாடலையும் யுவன் ஷங்கர் ராஜா ரீ மிக்ஸ் செய்திருக்கிறார். இப்படியே படத்துக்குப் படம் செய்தால் ரீ மிக்ஸ் ராஜா என்று பெயர் வாங்கிவிடுவார். புதுப்பேட்டை படத்திற்குப் பின் பெரிதாக எதிர்பார்த்தேன். ஆனால் யுவன் சரியான பழைய பேட்டையாகிக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் Hari படத்துக்குப் படம் புதிய களம் தேர்ந்தெடுக்கிறார். இதில் தூத்துக்குடியின் உப்பளம். எமோஷன்களை கையாளும்போது சரேலென அடுத்தக் காட்சிகளுக்கு தாவிவிடுகிறார். ஆக்சன்களை கையாளும்போது பரபரவென நீட்டி முழக்குகிறார். படத்தில் அடிக்கடி அரிவாள் வருவதால், ஆக்ஷன் படமோ எனத் தோன்றுகிறது. ஆனால் பிண்ணனியில் உள்ள குடும்பக் கதைதான் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. இதை இயக்குனர் சரியாக பேலன்ஸ் செய்துள்ளார்.

கொஞ்சம் பாசம், கொஞ்சம் இரத்தம் இரண்டும் கலந்த குடும்பக் கலவை - தாமிரபரணி. எல்லோரும் பாருங்கள் என்று சிபாரிசு செய்ய மனமில்லை. போகாதீர்கள் என்று தடுக்கவும் மனமில்லை. அதுதான் தாமிரபரணி.

Wednesday, February 7, 2007

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் தவிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி விழிக்கிறேன்

இருந்தாலும் சொல்கிறேன்

வணக்கம்

Thursday, January 11, 2007

வலையில் சிக்கும் விமானங்கள்

டாட்டா ஸ்கையில் பணிபுரியும் நண்பர் போனவாரம் பெங்களுருவிலிருந்து வந்தார். அதற்கு முந்திய வாரமும் வந்தார். அடுத்த வாரமும் வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் விமானப் பயணம் தான். டிக்கெட் விலை என்ன தெரியுமா? மயக்கமடைந்து விடாதீர்கள். வெறும் ஒன்பது ரூபாய். ஆனால் ஏர்போர்ட் வரியைச் சேர்த்தால் போய் திரும்பி வர வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான். விமானப் பயணம் என்பதால் நேரம் மிச்சம், பணமும் அதிகமில்லை. சொகுசு பஸ்ஸை விட கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். முன்பெல்லாம் போரடித்தால் நெட்டில் உட்காரந்து கொண்டு "சாட்"டுக்கு வா என்பார். ஆனால் இப்போது உடனே சென்னைக்கு பறந்து வந்துவிடுகிறார். அதற்கு காரணமே இன்டர்நெட் எனப்படும் இணைய வலை தான்.
விமான டிக்ககெட்டுகளின் விற்பனை இப்போது இணைய தளங்களில் சூடு பிடித்திருக்கின்றன. இந்த வருடம் மொத்த டிக்கெட் விற்பனையில் ஐந்து சதவிகிதம் இணையம் வழியாக நடந்திருக்கிறது. அடுத்த வருடம் அது இரண்டு மடங்காகும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழவதும் பிரபலமான நிறுவனம் Cox & Kings. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Urrshila Kerkar எங்கள் நிறுவனத்தின் அடுத்த இலக்கு வலை வழியாக டிக்கெட் பதிவு செய்யும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்துவதுதான் என்கிறார். விமான டிக்கெட் முன்பதிவுக்காக அந்த நிறுவனம் www.ezeego1.com என்ற வலைத்தளத்தை நடத்தி விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது. அறிமுகச் செலவு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். கோடி ரூபாய் செலவு செய்து 9 ரூபாய்க்கு விமான டிக்கட் விற்பனையா என்று மலைக்காதீர்கள். சில்லறை விற்பனையாகிவிட்ட விமானப்பயணம் இனி இப்படித்தான்.
ஏற்கனவே இரண்டு இணைய தளங்கள் இதில் கொடி கட்டிக்கொண்டிருக்கின்றன. www.makemytrip.com மற்றும் www.travelguru.com ஆகிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள்தான் இந்தத் துறையின் முன்னோடிகள். Indo Asia Tours என்ற நிறுவனம் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு இந்த வியாபாரத்தில் இறங்கியுள்ளது. விரைவில் பத்து கோடி ரூபாய் செலவில் www.indiaholidaymall.com என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தி வியாபாரத்தை பெருக்கப் போவதாக அறிவித்துள்ளது.
பத்து ரூபாய் கொடுத்து பிரவுசிங் சென்டரில் நுழைந்து பத்து கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இணைய தளம் வழியாக, வெறும் 9 ரூபாய்க்கு விமான டிக்கெட் பதிவு செய்வது இனி அதிகரிக்கும் என்று விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வட்டாரங்கள் தெரிவிக்காத ஒரு விஷயம் உண்டு. இந்த மலிவு விமானப் பயணங்களில் தாகமெடுத்தால் தண்ணீர் கிடைக்காது. காசு கொடுத்தால்தான் தண்ணீர் கிடைக்கும். இதுதான் மலிவுக்கு நாம் கொடுக்கும் விலை.

Monday, January 8, 2007

கோன்பனேகா குரோர்பதியில் ஷாரூக் கான்

சின்னத்திரை வியாபாரத்தில் அனில் அம்பானி

சின்னத்திரை வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும் வலை விரிக்கவில்லை. பெரிய பெரிய வியாபார முதலைகளையும் கொக்கி போட்டு இழுத்திருக்கிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Adlabs என்ற பெயரில் ஒரு மல்டிமீடியா கம்பெனி துவக்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தற்போது ரஜினியை கார்டூனாக்கி பணம் கொழிக்கப்போகும் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த தயாரிப்புக்கு இடையிலேயே வளர்ந்துவரும் மீடியா கம்பெனிகளை வளைத்துப்போடும் முயற்சியில் இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் குறி Synergy Communications. அந்த நிறுவனத்தின் பெரும்பான்பையான பங்குகளை அம்பானி வாங்கிவிட்டதாகக் கேள்வி. அம்பானியே குறிவைக்கும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய கம்பெனியா என்று வியப்பவர்களுக்கு ஒரு தகவல்.
சரிந்து கிடந்த அமிதாப்பை மீண்டும் சிகரத்துக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி "கோன் பனேகா குரோர்பதி". இந்த நிகழ்ச்சியை தயாரித்தது சினெர்ஜி கம்யூனிகேஷன்ஸ்தான். அது மட்டுமல்ல, தரங்கெட்ட தமிழ் சீரியல்களுக்கிடையில் எப்போதாவது தவறிப்போய் BBCயில் மாஸ்டர் மைண்ட் என்ற அபாரமான குவிஸ் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவின் தலை சிறந்த அறிவாளிகளை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம். வெற்றிகரமான இந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பதும் சினெர்ஜி கம்யூனிகேஷன்ஸ்தான். இந்த நிறுவனத்தின் பெயர் வேண்டுமானால் நம்மில் பலருக்கு அறிமுகமில்லாத பெயராக இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் தலைவரான சித்தார்த்தா பாசுவை கண்டிப்பாக நாம் அனைவரும் டிவியில் பார்த்திருப்போம்.

சுருக்கமாகச் சொன்னால் டிவி என்பது கண்ணைக் கசக்குகிற வெறும் சீரியல் சமாச்சாரம் அல்ல. ஒளியைக் காசாக்கும் பணம் கொழிக்கும் வியாபாரம். இல்லையென்றால் சித்தார்த்தா பாசுவுடன் அனில் அம்பானி கைகோர்ப்பாரா?


கோன்பனேகா குரோர்பதியில் ஷாரூக் கான்

முதல் பாராவுக்கும் இந்த பாராவுக்கும் இடையில் சில நாட்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் திடீரென ஒருநாள் டெலிவிஷன் சானல்கள் எல்லாம் கிரிக்கெட்டை மறந்து விட்டு ஷாரூக்கானைப் பற்றி செய்தி வெளியிட்டன. காரணம் யாரும் எதிர்பாராத அதிசயமாக பாலிவுட்டின் உச்சத்திலிருக்கும் ஷாரூக்கான் அமித்தாப்பச்சனுக்குப் பதில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டுவிட்டார். உறுதி செய்யப் படாத தகவல்களின்படி அவருடைய ஒரு எபிசோடு சம்பளம் 75 லட்சம். நிகழ்ச்சியைப் பொறுத்த வரை, முதல் கோடிஸ்வரன் ஷாரூக்தான்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் சித்தார்த்தா பாசுவின் சினர்ஜி கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் அம்பானி வாங்கும் அளவிற்கு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் சினர்ஜி கம்யூனிகேஷனில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. காரணம் ஏன் என்று முதல் பாராவை எழுதும் வரை எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது புரிந்தது போல இருக்கிறது. அம்பானியும், ஷாரூக்கானும் முதலிலேயே பேசி வைத்துக்கொண்ட நிகழ்வுதான் இது என்று எனக்குத் தோன்றுகிறது. ஷாரூக் செய்வதால் நிகழ்ச்சியின் பிரபலம் கூடும். டிஆர்பி எகிறும். அதனால் சினர்ஜி கம்யூனிகேஷனின் வருமானம் கூடும். அதில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதால் ரிலையன்சுக்கும் வருமானம் எகிறும். இது என் யூகம்தான். இனி நாம் ஒவ்வொரு முறையும் ரிமோட் பட்டனை அமுக்கும்போது, நமக்கு மின்சாரக்கட்டணம் உயரும். அங்கே ரிலையன்சுக்கும், ஷாருக்கிற்கும் கோடிகள் புரளும்.