Saturday, February 14, 2015

ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்

காதலிக்கும்போது
வானத்தை தொட்டுவிடலாம் போலிருக்கும்.
காதலிக்கப்படும்போது
வானம் நம்மைத் தொடுவது போலிருக்கும்.
விண்ணைத் தாண்டலாம் - ஆனால்
ஒருபோதும் காதலைத் தாண்டமுடியாது.
வானம் பறப்பதை சுகம் எனச் சொல்லும்.
காதல் சிறைப்படுவதை சுகம் என உணர்த்தும்.
காதலுக்கென்று ஒரு வானம் உண்டு.
அங்கே காதல் மேலே
வானம் கீழே!
நாம் ஒரு முறை கூட காதலிக்காமலிருக்கலாம் - ஆனால்
ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்.
உண்மைக் காதல் நாம் நம் மனதில் இருப்பதல்ல.
மற்றவர் மனதில் வசிப்பது.
நான் உங்கள் மனதில் இருக்கிறேனா?

Sunday, February 8, 2015

கிரவுட் ஃபண்டிங்!


வசந்த சேனா வசந்த சேனா!
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நானென்ன நானா
சேனா... வசந்த சேனா!

இந்தப் பாடல் பலருக்கும் ஞாபகம் இருக்கும். ஆனால் படத்தின் பெயரைக் கேட்டால் தெரியாது. இது சூர்யா நடித்து அதிகம் பிரபலமாகாத ஸ்ரீ என்றொரு படம்.  அந்தப் படத்தின் இசையமைப்பாளர் T.S.முரளிதரன். எனது நண்பர்!

 ரோஜாவும் ஏ.ஆர்.இரகுமானும் வருவதற்கு முன், என்னிடம் ஒரு ஆடியோ கேசட் வந்தது. மெரைன் இஞ்ஜினியராக இருந்த எனது நண்பன் ஒருவன் அதைக்கொடுத்து, இதில் என் நண்பனின் டியூன்ஸ் இருக்கிறது கேட்டுப்பார் என்றான். அக்கால வழக்கமான ஆர்மோனியம், கிடார், தபேலா ஒலிகளை எதிர்பார்த்து அசட்டையாக கேசட்டை ஒலிக்கவைத்தேன். முதல் டியூன் கேட்டதுமே நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் கூட்டமே அசந்துவிட்டது. நாங்கள் எவரும் அதற்கு முன்பு கேட்டிராத டிஜிட்டல் இசை. புத்தம் புது ஒலிகள். அவ்வளவுதான் அன்றே அவரை நண்பராக்கிக்கொண்டேன். பல கதைகள் பேசி, பல டியூன்கள் போட்டு தற்போது அவரே ஒரு இயக்குநராகிவிட்டார்.

வித்தையடி நானுனக்கு படம் ரெடி
”அவர்” என்ற டைட்டிலுடன் ஒரு படத்தை தயாரித்து இயக்க முடிவு செய்திருந்தேன். அதற்காகவே Canon 7D மற்றும் உபகரணங்கள் வாங்கியிருந்தேன். அப்படங்களுக்கான பாடல் ஒலிப்பதிவின்போது முரளி ஒரு கதை சொன்னார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் என்பதையும் விளக்கினார். அதனால் சட்டென்று தைரியம் பிறந்து ”அவர்” படத்துக்கு முன் ”வித்தையடி நானுனக்கு” படத்தின் தயாரிப்பில் இறங்கி படத்தையும் தயாரித்துவிட்டோம். நான் ISR Ventures, முரளி Media Merchants. இருவரின் கூட்டுத்தயாரிப்பாக படம் ரெடி.


தயாரிப்புக்காக அல்ல - ரிலீசுக்காக Crowd Funding 
இப்போது அதன் தொடர்ச்சியாக படத்தின் ரிலீசுக்காக Crowd Funding-ல் இறங்கியுள்ளோம். முதலில் தயங்கிய என்னை முரளியின் விடாத தொடர் முயற்சி மாற்றிவிட்டது. www.indiegogo.com என்ற இணையதளத்தை ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கவனித்தபின் இதில் நம் முயற்சியை துவக்குவோம் என்றார். இதோ.. நாங்கள் தயார்!

650 ரூபாய் போதும்
ஆளுக்கு ரூ.650.  இதுபோல 3500பேரை ஒருங்கிணைக்கலாம் என்றார். விட்டால் மீண்டும் தயங்குவேன் என்று முயற்சியை துரிதப்படுத்திவிட்டார். ”வித்தையடி நானுனக்கு” உருவாவதற்கு அவருடைய முயற்சியே காரணம். நானாவது திரைப்படம் தயார் ஆனதும், டிவி நிகழ்ச்சிகள், டாகுமென்டரிகள் என பல திசைகள் திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் முரளி தனது அவருடைய ஆர்வம் குறையால் அதிலேயே கவனமாக இருக்கிறார். அதனால் திரைப்படம் வெளியாவதற்கும் அவருடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன். இணை தயாரிப்பாளராக நானும் அவருடைய முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் படம் தயாரிப்பது எளிது. வெளியிடுவதுதான் கடினம். தயாரிப்புச் செலவை விட வெளியிடும் செலவு அதிகம். அதற்கு Crowd Funding உதவும் என்றுதான் தோன்றுகிறது. அதனாலேயே இந்த முயற்சி. எங்களைப்போன்ற புதிய சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களும் இந்த இணையதளத்தை ஒரு முறை பார்க்கலாம், நம்பிக்கை பெறலாம்.

https://www.indiegogo.com/projects/vithaiyadi-naanunakku-tamil-feature-film

வித்தையடி நானுனக்கு பற்றிய Crowd Funding விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

கிரவுட்ஃபண்டிங் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?
கிரவுட்ஃபண்டிங் வழியாக எங்கள் திரைப்படம் ரிலீஸ் ஆவது ஒருபுறம் இருக்கட்டும். டிஜிட்டல் சினிமா பிரபலம் ஆகாத காலகட்டத்தில் ”அவர்” திரைப்படத்தின் துவக்கவிழாவையே ”டிஜிட்டல் சினிமா” பற்றிய வொர்க் ஷாப்பாகத்தான் நடத்தினோம். அதுபோல கிரவுட் ஃபண்டிங் பற்றியும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளத்தயார். எங்களைப் போன்ற புதிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இது பற்றி கேள்விகள் இருக்கும். கிரவுட் ஃபண்டிங் என்றால் என்ன? அதன் வழியாக எவ்வளவு திரட்ட முடியும்? அது எப்படி சாத்தியமாகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல நீங்கள் நண்பர் முரளியை அழைக்கலாம். அவருடைய எண் - 9841524590

பின் குறிப்பாக ஒரு ஃபிளாஷ்பேக்
வசந்தசேனா பாடல் வெறும் டியூனாக இருந்தபோது நான்தான் அதற்கு வரிகள் எழுதினேன்

பூவைக்கண்டேன் பூவும் ஆனாள்
நிலவைக் கண்டேன் நிலவும் ஆனாள்
கவிதை கண்டேன் கவிதை ஆனாள்
தோழி... காதல் தோழி!

வெறும் டியூனாக இருந்த பாடல் பின்னொருநாளில் திரைப்பாடலாக உருவெடுத்தது போல, முரளியின் ”வித்தையடி நானுனக்கு” படமும் திரைப்படமாக விரைவில் தியேட்டர்களின் திரையைத்தொடும் என்று நம்புகிறேன்.