Friday, February 9, 2007

முத்தம்


கொடுத்த முத்தத்தை விட
கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம்.

முத்தமிட்டது சில வினாடிகளே!
முத்தம் தந்த பரவசம்
தினம் தினம்.

சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன்
அவளை முத்தமிட.
ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன்
முதல் முத்தம்.


முதலில் கை
பின் கன்னம்
அப்புறம் உதடுகள்
இந்த வரிசையில் முத்தமிட நினைத்தேன்.
அவள் என் உதடுகளை கவ்வியதும்
எல்லாமே மாறிப்போனது.

2 comments:

Anonymous said...

FANTASTIC...SELVAKUMAR...
YOU ARE DIPPING ALL THE READERS OF THIS NICE POETRY INTO FINE LOVE TUNES...THE ENDING IS REALLY SUPERB..

MOOKAMBHIKA

ISR Selvakumar said...

என்னை எழுத வைத்த காதலுக்கும்,
எழுதிய என்னை வாழ்த்திய மூகாம்பிகாவுக்கும்,
நன்றி!