Saturday, February 22, 2014

ரஜினி - கோச்சடையான் மொபைல்

ரஜினி மொபைல்!

கார்போன் நிறுவனம் Karbonn Kochadaiiyaan என்ற பெயரில் ஒரு புது மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மாடல்கள் இறங்கியுள்ளன. சில ஆன்லைன் தளங்கள் பேசிக் மாடலுக்கு 2600 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விற்பனையைத் துவக்கிவிட்டன. முப்பதாயிரம் ரூபாய் வரை மாடல்கள் உள்ளதாக செய்திகள் பரபரக்கின்றன.

இது விளம்பர உத்தி எதிர்பார்த்ததுதான். அடுத்த கட்டமாக Appகள் மற்றும் Games வந்திறங்கும். ஆனால் இந்த உத்திகள் மிக விரைவிலேயே போரடிக்க ஆரம்பித்துவிடும்.


  • இன்னும் 5 வருடங்களுக்குள், ஃபோனும், ஃபோனுக்குள் திரைப்படமும் சேர்த்தே மார்கெட்டுக்கு வரும். வந்தாக வேண்டும்.
  • தற்போது இலவசமாகக் கிடைக்கும் Behind the scenes மற்றும் shooting spot புகைப்படங்களை தியேட்டர்களில் விலை கொடுத்து பார்ப்போம். 
  • காட்சிகள் தினமும் ஒரே மாதிரி இருக்காது. சுவாரசியத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சி திரைப்படத்தில் கூடும், குறையும். 
  • எல்லோருக்கும் ஒரே திரை என்பது போய் ஆளுக்கொரு திரை சீட்டிலேயே பொருத்திக் கொள்ளும் காலம் வரும். 
  • திரைப்படத்தை விட, அதை அமர்ந்து பார்க்கும் இடத்திற்குதான் வாடகை வசூலிக்கப்படும். 
  • அதிக வாடகைக்காக அதிக வசதிகள் தரப்படும். 
  • இது தவிர ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் விருப்பப்பட்ட நேரத்திற்கு படம் ஒளிபரப்பாகும்.




கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் நாம் - யாருக்கும் வெட்கமில்லை

ஜெயலலிதா நேர்மையானவராக இருந்திருந்தால், இது வரை போராடியவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு ஒரே ஒரு வார்த்தையாவது பாராட்டிச் சொல்லியிருப்பார். ஆனால் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதையும், கருணாநிதியை சீண்டுவதையும் ஒரு அறிக்கையாக்கி அதை சட்டசபையிலும் வாசித்துவிட்டார்.

கருணாநிதியும் இதையேதான் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களையும், போராடியவர்களையும் மறந்துவிட்டு, ஜெயலலிதாவுக்கு கிடைத்த வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்ற கடுப்பை வெளிப்படுத்துவதையே ஒரு அறிக்கையாக்கி வெளியிட்டுவிட்டார்.

தமிழக மக்களாகிய நாமும் இவர்களின் சண்டைக்குள் ஒன்றிப் போய், யார் பெரியவர் உடன் பிறப்பா, ரத்தத்தின் ரத்தமா என்று தெருச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த விஷயத்தை இந்த அளவுக்கு தரமிறக்கி விவாதப் பொருளாக்கியதில் ஒன்று மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஜெயலலி்தா, கருணாநிதி மற்றும் நாம் உட்பட யாருக்கும் பொறுப்போ, கண்ணியமோ, வெட்கமோ இல்லை. எல்லோரும் சுயம் மறந்து அரசியல்வாதிகளாகிவிட்டோம்.