Tuesday, March 16, 2010

நினைவிடுக்கில் வழியும் நிலவொளி


அள்ளி எடுத்துப் போக முடியாத நிலவொளியாய்
என் மேல் எப்போதும் பொழிகிறாய் நீ!

ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.

கதவுகள் இல்லாத வானத்தில்
நீ வந்து போகும் தடம் தெரியவில்லை.

ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்.

அது போதுமெனக்கு!

.................................................................................