Thursday, November 3, 2011

முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

உங்கள் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை 'அம்மா' என்றே குறிப்பிடுகின்றோம். அந்த உரிமையில் கேட்கிறேன். தயவு கூர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றவோ, மூடவோ வேண்டாம்.

உலகில் சச்சரவுகள் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது, நூலகங்களைத் தவிர.
நூலகங்களில் மட்டும்தான் வாசிப்பதும், சக மனிதனை நேசிப்பதும் ஒரு சேர நிகழ்கின்றன.
எங்களுக்கு நூலகம் வேண்டும்.

விரைந்து நல்ல முடிவெடுங்கள். உங்களை மேலும் நேசிக்க வாய்ப்பு தாருங்கள்.

அன்புடன்

தமிழக மக்களில் ஒருவன்
செல்வகுமார்.