Saturday, September 26, 2015

#மல்லிகைக்கிழமை



அவள் கழுத்துக் கதகதப்பில் 

ஈர மல்லிகைச் சரம் உலர்ந்து மலரும்போது
பூமிப் பந்தே மல்லிகைப் பந்தானது போல்
ஒரு மாய வாசம் எனைச் சூழ்ந்தணைக்கிறது!

#ப்ரியம் என்பது



‪#‎ப்ரியம்‬ என்பது
ரயில் நிலையத்தில் யாரையோ தேடும் பாவனையில்
நான் உன்னையே சுற்றிச் சுற்றி வருவதும்,
தோழிகளிடம் விடைபெறும் பாவனையில்
நீ என்னிடம் கையசைத்து விடைபெறுவதும்.

பல்லைக் காணோம்


”வாயைத் திறங்க”
”ஈஈஈஈஈ....”
”ஈஈஈஈஈ இல்ல... ஆஆஆ”
”ஆஆஆஆஆ”
”ஆ....”
”என்ன ஆச்சு?”
”பல்லைக் காணோம்”
”இல்லையே காலையில பிரஷ் பண்ணும்போது கூட இருந்துச்சே...”
”கடவாய் பல் ரெண்டும் பாதிப்பாதிதான் இருக்கு”
”மீதி...”
”உங்களுக்கு சுகர் இருக்கா?”
”வீட்டுக்கு வாங்கிட்டுப்போற சுகர்தான் இருக்கு”
”பி.பி”
”மாத்திரை இருக்கு. ஆனா ஒரு மாசமா சாப்பிடல”
”வயசு என்னாச்சு”
”52”
”வயசுதான் முக்கிய காரணம்”
”இப்ப என்ன பண்றது?”
”பிபி செக் பண்ணிட்டு பல்லை பிடுங்கிடலாம்”
”பிடுங்கிட்டா டொக்காகிடுமே”
”வேற வழியில்ல. பக்கத்து பல்லும் ஆடுது”
”அதையும் பிடுங்கணுமா? ”
”சேச்சே... புதுசா பல்லு கட்டிடலாம்”
”அந்த பல்லை வைத்து பட்டாணி கடிக்கலாமா?”
”தாராளமா.. தினமும் கழற்றி பிரஷ் பண்ணினா 5 வருஷம் கேரண்டி”

ஆகவே அடுத்த முறை நான் உங்களை 5 வருட காரண்டியுடன் கூடிய புதுப்பற்களுடன் சந்திக்கிறேன். நீங்கள் பட்டாணி, முறுக்கு உள்ளிட்ட நொறுக்குகளை தயார் செய்து வையுங்கள். உற்சாகமான வணக்கம்! சியர்ஸ் மக்காஸ்!