கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன்.



”பணம் கொடுத்தோம், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு அக் குழந்தைகள் சாப்பிட உதவும். அதற்குப் பின் என்ன? இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா? ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா?” என்றார்.

காட்சி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிற சினிமா இரசிகனின் மனநிலை இது போன்ற சமூக சேவைகளுக்கு ஒத்து வராது. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிக்கின்ற ஒரு குறுகிய கால திட்டமாவது இருக்க வேண்டும்.


சேரன் மனதிலும் இதே எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும். நாங்கள் தொகையை வழங்கச் சென்ற நேரத்தில் அங்கு ஒரு பெண் உட்பட சில இளம் கம்ப்யூட்டர் வல்லுனர்களை பார்த்தோம். ஒவ்வொரும் TCS, Ford போன்ற நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்பவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, தற்போது பணிக்கு வந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக சமூக நலப் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். குறிபபாக நாங்கள் சென்றிருந்து குழந்தைகள் விடுதிக்கு, ஒரு வருடத்திற்கும் மேல் வருகை தந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க உதவி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
”இளைஞர்களாகிய நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. என்னுடைய வருகையை விட, உங்கள் வருகை அர்த்தமுள்ளது”, என சேரன் அவர்களை பாராட்டினார்.
நாங்கள் சில ரோஜாக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வார்த்துவிட்டு வந்துவிட்டோம். அந்த இளைஞர்கள் அவற்றை தினம் தினம் பாதுகாக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் ”புதிய தலைமுறை”