Sunday, February 1, 2015

சாக்லெட்டாழ்வார்!

எதிலும் ஆழமாக ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்றார்களாம். ஆனால் அந்தக் காலத்தில் எங்கும் எதிலும் பக்தியைத்தான் நிரப்பியிருக்கிறார்கள். காதலைக்கூட பக்தியாக்கி வழிந்து அழுது தொழுதிருக்கிறார்கள்.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிமிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாண் ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார்
இந்தப் பத்து ஆழ்வார்களும் பெருமாலை டிசைன் டிசைனாக வியந்திருக்கிறார்கள். நீதான் ஆழி, ஊழி, காடு, மடு, மலை, அலை, காலம் என சில்லறையாகவும் இவை எல்லாமே நீதான் என மொத்தமாகவும் வணங்குகிறார்கள். பிறகு நீ எனக்குள் வா அல்லது நான் உனக்குள் வருகிறேன் நாமனைவரும் ஒற்றையே என Singularity தியரி வடிக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் நீங்களும், நானும் நாமும் கூட ஆழ்வார்கள்தான். எப்போதும் இதிலேயே மூழ்கியிருப்பாதால் ஃபேஸ்புக்காழ்வார்கள். எனக்கு மட்டும் இன்னொரு பெயர். அடிக்கடி சாக்லெட்டில் ஆழ்வதால்,
சாக்லெட்டாழ்வார்!

(சுஜாதா எழுதியுள்ள ”ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்” புத்தகத்தை நான் படிக்க ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னா இப்ப நீங்க கண்டிப்பா நம்புவீங்க)

No comments: