Friday, October 10, 2008

தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள்

பொதுவாக தமிழக அரசியல் என்பது, கருணாநிதியை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அரசியல். அதனால் தேர்தலை பொருத்தவரை அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி விஷயத்தில் கருப்பு ஆடுகள்தான். ஜெயிப்பது மட்டுமே குறிக்கோள் என்பதால், எல்லா அசிங்கங்களும் தேர்தல் நேரத்தில் நடக்கத்தான் செய்யும்.

தற்போதைய நிலவரப்படி விஜயகாந்த் எந்தக் கழகத்துடன் இணைந்தாலும், எதிர் கழகம் காலி. தனியாக நின்றால் விஜயகாந்த் காலி.

தி.மு.க
தற்போது DMK is in back foot. ஷாக் அடிக்கும் மின்சாரப் பிரச்சனையும், மதுரையிலிருந்து கொண்டு அதிரவைக்கும் அழகிரியும், தி.மு.கவின் தனிப்பெரும் மைனஸ் பாயிண்டுகள். எதிர்க்கட்சிகளை விட மோசமாக ஆளும்கட்சியை தாக்கும் விவகாரங்கள் இவை. ஆனால் ஸ்டாலின் சத்தம் போடாமல் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் மேல் குற்றச்சாட்டுகளே இல்லை. உள்ளாட்சித் துறையை கையில் வைத்துக்கொண்டு படு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே மீடியா வெளிச்சங்களைத் தவிர்க்கிறாரா அல்லது மீடியா வெளிச்சத்தை தன் மேல் விழ வைக்கத் தெரியாமல் தவிக்கிறாரா? என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தி.மு.கவின் ஒரே பிளஸ் தற்போது அவருடைய செயல்பாடுகள்தான்.

அ.தி.மு.க
விஜயகாந்த், இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களை கவர்ந்துவிட்டதில், அம்மா கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். கட்சியின் பலம் பலவீனம் இரண்டுமே ஜெயலலிதாதான். அவர், ஆக்டிவ் பாலிடிக்ஸிலிருந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் தொடர் ரெஸ்டில் இருந்ததும், சட்டசபையை தவிர்த்ததும், அக்கட்சியின் மிகப் பெரிய மைனஸ். அந்த இடைவெளியில் விஜயகாந்தும், ராமதாசும் ஸ்கோர் பண்ணிவிட்டார்கள். ஆனால் வீட்டுக்குள் சாக்கடை அடைத்த பிரச்சனைக்கு கூட (சன் டிவி உதவியுடன்) தொடர் போராட்டங்களை நடத்தி கட்சியை லைம் லைட்டில் வைத்திருந்தார். ஆரம்பத்திலும் இப்போதும் கிண்டல் செய்யப்படுகின்ற சமாச்சாரம் இது. ஆனால் இதை மிகப்பெரிய பிளஸ்ஆக நான் நினைக்கிறேன். தேர்தல் நெருக்கத்தில் அந்த துக்கடா போராட்டங்கள், கணிசமான வாக்குகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

தே.மு.தி.க
விஜயகாந்த்தை தவிர வேறு யாரையுமே மக்களுக்கு தெரியாது. விஜயகாந்த்தான் மீடியாக்களின் புதிய டார்லிங். கருணாநதி எதிர்ப்பு பாலிடிக்ஸில் முன்பு ஜெயலலிதாவை சுற்றி வந்த டிவி மைக்குகளும், தினசரி பேனாக்களும், தற்போது விஜயகாந்த் பக்கம் வந்துவிட்டன. அவரும் சளைக்காமல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார். இதுதான் தே.மு.தி.கவின் பிளஸ். தன்னுடைய எதிரிகள் என்று தி.மு.வையும், அ.தி.மு.கவையும் கை காட்டிவிட்டார். ஆனால் நண்பர்கள் யார் என்று அவரால் யாரையும் கை காட்ட முடியவில்லை. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவிட்டதால், நண்பர்களாக யாரை எப்படி தேர்ந்தெடுத்து கூட்டணி வைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார். மீடியாக்கள் அவருடைய குழப்பத்தை மறைத்து வைத்தாலும், இதுதான் அவருடைய பெரிய மைனஸ்.

கூட்டணி எதுவாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக ஸ்டாலினின் ஆர்ப்பாட்டமில்லாத பெர்ஃபாமன்சும், அ.தி.மு.கவின் சின்சியரான வார்டு லெவல் போராட்டங்களும், விஜயகாந்தின் 'தில்லான ஆள்' என்கிற அதிரடி கவர்ச்சியும், தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள். இந்த மூன்று குதிரைகளும்தான் கடைசி நேரத்தில் வாக்காளரை எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வைக்கப் போகின்றன.

6 comments:

மோகன் காந்தி said...

தமிழக அரசியலை நன்றாக படம் பிடித்து காட்டினிங்க

தமிழன் said...

உள்துறை அமைச்சர் அல்ல உள்ளாட்சி துறை அமைச்சர் அவருக்கு எந்த துறை கொடுத்தாலும் திறம்படவே செயல்படுவார்.

ISR Selvakumar said...

திலீபன்
//உள்துறை அமைச்சர் அல்ல உள்ளாட்சி துறை அமைச்சர் //
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி! தவறை சரி செய்துவிட்டேன்.

Anonymous said...

entha kuthiraiyilum pothu-makkalaal nimathiyaga savaari seiya mudiyathu.

ISR Selvakumar said...

ஸ்பீட்,
எந்தக் குதிரையும் நிம்மதிக்கு உத்தரவாதம் தராது. ஆனால் மெகா சீரியல்களுக்கு மத்தியில் ஆல்டர்நேட் என்டர்டெயினர்ஸ் இவர்கள்தான்.

அத்திரி said...

அருமையான அலசல்