Wednesday, October 10, 2012

சொல்லக் கேட்டதும், நெஞ்சைத் தொட்டதும்



சேத்துப்பட்டு பாலம்!
கூடியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனானேன்!
மற்றவர்கள் மேல் இடிக்காமல் கூட்டத்தின் மையத்தை எட்டிப்பார்த்தபோது . . .

”பழவால்ல ழான் போழ்ய்டுவேன்” என்றபடி மோட்டர் சைக்கிளில் ஒருவன்.
அவனுக்கு முன்னும் பின்னும் இரு குழந்தைகள். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து முன் இருக்கையில் இருந்த பெண் குழந்தை அழ ஆரம்பித்தாள்.

”யோவ் இறங்குய்யா.. குழந்தைகளை வைச்சுக்கிட்டு எப்படிய்யா வண்டியை ஓட்டிக்கிட்டு போவ?”
”எழக்கு தெரியும். ழான் போழ்ய்டுவேன்”
குழந்தைகள் அழ அழ கூட்டம் கையைப் பிசைந்தது.
அதற்குள் ஆபீஸில் இருந்து அழைப்பு. ”உடனே வாருங்கள்”
உடனே ஆபீஸ் வந்துவிட்டேன். என் மனம் இன்னமும் சேத்துப்பட்டு பாலத்தில் இருக்கிறது.
அந்தக் குழந்தைகள் பத்திரமாக வீடு சேர்ந்திருப்பார்களா?

- (நண்பர்) சொல்லக் கேட்டதும், நெஞ்சைத் தொட்டதும்

2 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

kudichittu vandi ottrathe thappu, athilum kudumbaththoda vandiyila pona avargalai enna seiyalaam?

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் கல்யாணம் தேவையா...?

தவறு துணைவியிடம் உள்ளது...