Thursday, May 22, 2014

உனக்காக மௌனமாக ஒரு இசை


மலரும் நானும்
நானும் பறவைகளும்
கடலும் நானும் 
நானும் காற்றும் இணைந்து
மாபெரும் இசையை உருவாக்கியிருக்கிறோம்.

நீயும் நானும்
நானும் நாமும்
சந்திக்கும் ஒரு பொழுதில்
அதை நான் மட்டும்
உனக்காகப்பாடுவேன்.

அந்தப் பாடல்
எந்தக் கருவியிலும் வாசிக்க முடியாத
தொடர் மௌனமாகக் கூட இருக்கலாம்.

ஆனால் என் இதயத்தின் நடுக்கம்
உனக்கு அதைப் புரிய வைத்துவிடும்.
#அவளிசை

No comments: