Sunday, March 8, 2015

மகளிர் தின வாழ்த்துகள்!


என்றாவது ஒரு நாள்
என் குரலுக்குப் பதிலாக
என் ஆன்மாவின் குரல்
யாருக்காவது கேட்டிருந்தால் 
அதற்குக் காரணம்
எனது ஆன்மாவாக திகழும் பெண்களே.
அவர்களின் நேசமே எனது குரல்!

இன்றொரு நாள் அவர்களின்
கைவளையாகவோ, கால்கொலுசாகவோ மாறி
அவர்களின் அசைவுகள் தரும் ஒலிகளால்
அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்க விருப்பம்!

பெண்மையும் அதன் மென்மையும் 
அது தரும் வலிமையும் உண்மையும் வாழ்க!

மகளிர் தின வாழ்த்துகள்!
‪#‎womensday‬

No comments: