Tuesday, May 7, 2024

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை என்றொரு பாடல். இப்போதுதான் டிவிட்டரில் முதல் முறையாகக் கேட்டேன். ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ டிரைவர் பாடினார். பாடி முடிக்கும்போது உணர்வு மிகுதியில் அழுதுவிட்டார். அப்போது ஒரிஜினல் குரலை ஒலிக்க விட்டார்கள். குரல் இளையராஜா!

முழுப்பாடலையும் இனிமேல்தான் தேடிக் கேட்கப் போகிறேன். சில ஆட்டோ டிரைவர்கள் தேர்ந்த மெலடி இரசிகர்களாக இருப்பார்கள். அவர்களின் பிளே லிஸ்டில் பெரும்பாலும் எளிமையான, ஆர்கெஸ்ட்ராவின் ஆதிக்கம் அதிகம் இல்லாத, இனிமையான பாடல்கள் இருக்கும். இந்தப்பாடலைக் கேட்டதும் ஒரு கணம் ஆட்டோவில் அமர்ந்து கேட்டது போலத் தோன்றியது.
மறக்காமல் சொல்லிவிடுகிறேன், வீரபாண்டி என்ற அந்த ஆட்டோ டிரைவருக்கு நல்ல குரல்.

No comments: