Saturday, August 16, 2008

நானே கேள்வி - நானே பதில்

61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த உறுதி மொழி என்ன?

தமிழன், கன்னடன், மலையாளத்தான், தெலுங்கன், சிங்கு, ஹிந்திக்காரன் என்று தனித் தனி அடையாளங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாது.

ஆனாலும் தமிழனை கன்னடன் வெறுப்பதையும், பதிலுக்கு கன்னடனை தமிழன் வெறுப்பதையும் தவிர்க்கலாம். இது நாடு முழுவதும் வெவ்வேறு மொழி பேசும் அனைவருக்கும் பொருந்தும். வல்லரசாக மாறிவரும் இந்தியா, நல்லரசாகவும் குடியரசாகவும் திகழ எல்லலோருமே இணக்கமாக வாழ வேண்டியது அவசியம்.

61வது சுதந்திர தினத்தில் நான் எடுத்த முடிவு இதுதான். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே மொழியை காரணமாக வைத்து மனிதர்களையும், மண்ணையும் நான் வெறுக்க மாட்டேன்.

No comments: