Saturday, August 16, 2008

திரு.கட்டுமானத்துறை அவர்களுக்கு பதில் - நாடு எப்ப திருந்தும்?

திரு.கட்டுமானம் அவர்களுக்கு,
'அப்போது எல்லாமே நல்லா நடந்தது'
எமர்ஜென்சியில் பாதிக்கப்படாத எல்லோருமே சொல்கிற ஒரே விஷயம் இதுதான்.

பாதிக்கப்பட வேண்டும் அல்லது பாதிப்பை புரிந்து கொள்கிற பக்குவம் வேண்டும், அப்போதுதான் வலிகள் புரியும். இன்றைக்கு காந்தி கேலி செய்யப்படக் காரணம் வலி புரியாத தன்மைதான். இன்றைக்கும் எமர்ஜென்சிக்கு சிலர் கொடி பிடிக்கக் காரணம் வலியும் கிலியும் அவர்களுக்கு வந்ததில்லை.

மனிதன் அதிகாரத்திற்கு அடிமை ஆகிவிட்டால் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும், நாம் சுதந்திரமாக சுவாசிப்பதைத் தவிர.

இன்றைக்கு விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.

என் கல்யாண மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று அரசாங்கத்தை எதிர்த்து விஜயகாந்த் கூப்பாடு போட முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.

இது போல இன்னம் எவ்வளவோ சொல்லலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்வேன். ஏனென்றால் இன்று எமர்ஜென்சி இல்லை.

No comments: