Wednesday, October 22, 2008

ல.ச.ரா : வாழ்க்கையே ஒரு பேத்தல்

"நீங்க எப்படி சார் டீச்சிங் கத்துக்கிட்டீங்க?"
"டீச்சிங் பண்ணித்தான்"

இவைதான் என்னுடைய வகுப்புகளில் அவ்வப்போது கேட்கப்படும் கேள்வியும், நான் எப்போதும் சொல்லும் பதிலும்.

Learn by teaching என்பது என்னுடைய கல்வி கற்கும் முறையாக இருந்துவருகிறது. இப்போது நான் வலைப்பூக்களில் பல விஷயங்களை எழுதுவற்க்கான காரணம், அவை எனக்கு தெரிந்திருப்பதால் மட்டுமல்ல, தெரிந்துகொள்வதற்க்காகவும்தான்.

ஒரு விஷயத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்திராமல் அது பற்றி எழுதலாமா? வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லலாமா?

இதற்கு நான் பதில் எழுதி அதை படிப்பதை விட சாகித்ய அகாடமி விருது பெற்ற போது, 1990ல் லா.ச.ரா ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை படியுங்கள்.

உங்க எழுத்துக்கள் புரியாத தன்மை (Obscurity) கொண்டவை என்று பேசப்படுவது பற்றி?
"லா.ச.ரா. புக்ஸ் நான் படிச்சேன். அது புரியலை" என்று சொல்லிக்கொள்வது ஃபாஷனா போச்சு. என் எழுத்துக்கள் புரியாதுன்னு இவா புரிஞ்சுண்டாளாம். நான் உங்களை ஒண்ணு கேக்கறேன். எழுத்தாளன் எழுதும்போது எல்லாத்தையும் புரிஞ்சுண்டுதான் எழுதறானா என்ன? எழுதணும்னு ஆர்வமும், வேகமும் இருக்கு. இருக்கறதைக் கொட்டிடறோம். எழுதறவனுக்கே நிறைய விஷயம் புரியறதில்லை. அதே மாதிரிதான் படிக்கறவனுக்கும்.

இன்னைக்குப் புரியாததது, நாளைக்குப் புரியலாம். நாளைக்குப் புரியாதது, நாளை மறுநாள் புரியலாம். என்றைக்காவது ஒருநாள் கட்டயாம் புரிந்துபோகும்! அப்படியே புரியாவிட்டால் தான் என்ன? வாழ்க்கையே ஒரு பேத்தல் தானே!

நன்றி : ஆனந்தவிகடன், 14.1.90

கேள்வியில் உள்ள Obscurity என்ற வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடியபோது, Deficiency or absence of light, darkness, condition of being unknown, being unclear or hard to understand என்று பல அர்த்தங்கள் காணப்பட்டன.

ஒரு வார்த்தைக்கே இத்தனை அர்த்தங்கள் இருக்கும்போது, ஒரு வாழ்க்கைக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கக்கூடும். அதில் ஒரு அர்த்தம், ல.சா.ரா கூறியதுபோல 'வாழ்க்கை என்பது ஒரு பேத்தல்'

என்னைப் பொறுத்தவரையில் கற்றதும் கற்பதும்தான் வாழ்க்கை. அதனால் எனக்கு Learn by teach வசதியாக இருக்கிறது.

4 comments:

Ramesh said...

What do you teach?

ISR Selvakumar said...

Ramesh,
I teach English Skills & Soft Skills

Unknown said...

ஒன்னுமே புரியலே
உலகத்துலே !
என்னமோ நடக்குது
மர்மாய் இருக்குது !
கண்ணாலே கேட்டதும்
கனவாய் தோன்றுது!
காதலே கேட்டதும்
கதை போல் ஆனது !

ISR Selvakumar said...

ரவி,
ஆக உங்களைப் பொறுத்தவரை வாழ்க்கையே ஒரு மாயை?