Tuesday, January 27, 2009

ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.இரகுமான், சுக்வீந்தர் சிங் - Live

சற்று முன் என்.டி.டி.வி செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட இரகுமான் ஆஸ்கர் வென்றது போல ஒரு செய்தி. ஏ.ஆர்.இரகுமான் 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் லைவ்வாக இசைத்து பாடுவதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டிருக்கிறாராம். எந்த மேடையில் தெரியுமா? ஆஸ்கர் விருதுகள் மேடையில். உடன் பாடப் போவது சுக்வீந்தர் சிங். ஜெய்ஹோ பாடலை எழுதிய 'குல்சார்' அன்று இரகுமான் குழுவினருடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் முதன் முதலாக ஆஸ்கர் மேடையில் ஒரு இந்தியனின் இசை, குறிப்பாக தமிழனின் இசை!

மேடையில் ஒலிக்கப் போகும் அந்த இசை, விருதையும் வெல்லுமா?
வெல்லும் என நம்புவோம்.
ஜெய்ஹோ!

1 comment:

Anonymous said...

தல பின்னிடும் பாருங்க.....