Wednesday, December 14, 2011

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி!

Supreme court asked Tamil Nadu and Keral not to arouse people’s feelings and create a fear psychosis.


Justice Lodha regretted that both parties, instead of dousing the fire, were adding fuel to it.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறு யார் பக்கம்? இதன் முடிவு என்ன என்பதை நாம் தமிழராக அல்ல, மலையாளிகளை எதிர்க்கிறவராக யோசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கேரள அரசும் இதே தந்திரத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் மோசமான, குள்ளநரித்தனமான அரசு தந்திரம்.

கடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதற்கல்ல. தமிழக கேரள எல்லைகளில் சர்வசாதாரணமாக மாற்று மாநிலத்தாரின் உடமைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து முடங்குகிறது. ரயில் மறிக்கப்படுகிறது. 25,000ம் பேர் ஒன்றாக அணி திரள்கிறார்கள். அவர்களை போர்வையாக வைத்துக்கொண்டு ஒரு கும்பல் மாற்று மாநிலத்தவர் மீது கல்லெறிகிறது, அடித்து நொறுக்குகிறது.

இதை தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான்காவது தூண் என்று வர்ணித்துக் கொள்ளும் மீடியாக்களோ, இந்த ரௌடிகளின் அட்டகாசத்தை மொழி உணர்வாகவும், மாநில உணர்வாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இதன் பின்னணி என்ன? எங்கே இருந்து வந்தது இந்த திடீர் விரோதம்? பிரச்சனையை தீர்க்க திராணியில்லாத அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின்றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள். உடனே எதிர்கட்சிகள் பதறிவிட்டன. மக்கள் விலைவாசி பிரச்சனை, அடிப்படை வசதிக் குறைவு பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், தாங்களும் உண்ணாவிரதம், போராட்டம், அணிவகுப்பு என்று தங்கள் பங்குக்கு மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

இதைச் செய்யாதே என்று கண்டிப்பாகச் சொல்ல இந்த அரசாங்கங்களுக்கு நாதி இல்லை (ஏனென்றால் மறைமுகமாக தூண்டிவிடுவதே அரசும், அரசியல்கட்சிகளும்தான்). நான் இதைச் செய்ய மாட்டேன், என்று சிந்தித்து முடிவெடுக்கும் அறிவும் அந்த கும்பலுக்கு இல்லை. (ஏனென்றால் அரசாங்கமே அனுமதிக்கிற ஒரு அராஜகத்தை அனுபவிக்கும் ஆசை)

உம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி. மனிதாபிமானங்களையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டு, விரோதங்கள், கோரமாக இளிக்கும்போது, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்?

நீங்கள் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தீர்ப்பது இருக்கட்டும். ஓவ்வொரு கேரள தமிழனும், தமிழக மலையாளியும், பயமின்றி இரவில் தூங்க நினைக்கின்றான். உங்களால் அதற்கு உத்திரவாதம் தர முடியுமா? முடியாது என்றால், பதவியை விட்டு ஓடுங்கள்.

எங்களுக்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளத் தெரியும். அவர்கள் மலையாளியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.

6 comments:

சேக்காளி said...

பத்த வைச்சத அணைக்க முடியும்னு நெனக்கிறியளா?

Jayadev Das said...

அருமை. கேரளா, கர்நாடகா, ஆந்திரம் இம்மூன்று மாநிலங்களாலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது [தமிழகத்தின் பக்கம் நியாயம் இருந்தும் கூட].

தமிழ்ச்செல்வி said...

அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின்றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள்....
idhtuthaan nadakirathu...super anna unga katturai...

venkatesh said...

அருமை

Raj said...

Super sir....correct uh eluthiyirukinga...

Raj said...

Super Sir, correct uh eluthiyirukinga..!