Thursday, September 11, 2008

1971ல் ஜெயகாந்தன் - 2008ல் கமல்

காலம் - 1971
நாயகன் - ஜெயகாந்தன்

"ஒரு விபசாரியின் கதையை எழுதும்போது, you can even justify prostitution; but you have no right to recommend it. அவள் விபச்சாரியானதற்க்கான நியாயங்களைக் கூட நீங்கள் கூறலாம்.  அதனை சிபாரிசு செய்யலாகாது."

'சமுதாய ஆன்மிகப் பார்வை' என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அது என்ன? என்ற கேள்விக்கான பதிலை ஜெயகாந்தன் இப்படி முடித்திருந்தார்.

"இராணுவத்திடமிருந்து தப்பிக்க தன்னிடம் அடைக்கலம் புகும் கம்யூனிஸ்டுகளை காப்பாற்றும் பொருட்டு, தனது அழுகின்ற குழந்தையின் வாயைப் பொத்துகிறாள், ஒரு தாய். அவர்கள் தப்பிக்கிறார்கள், ஆனால் குழந்தை மூச்சு முட்டி இறந்துவிடுகிறது."

பெற்ற குழந்தையையே கொல்ல நேருகிறபோது, அந்த இடத்தில் யார் இருந்தாலும் படிக்கிறவனையும் கூட, இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த அனுபவத்தில் பங்கு பெற வைத்து, அந்தக் கொலைக்கு உடந்தையாக்கி, மனம் குமுற வைக்கின்ற ஆன்மிகச் சக்தி, இந்தக் கதையில் இருக்கிறது என்று இந்தக் கதையை விவரிகிறார் ஜெ.கே.

நீங்கள் எழுதிய கதைகள் எல்லாம் இப்படி இருக்கிறதா?
இருக்கிறதோ, இல்லையோ இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
(நன்றி: ஆனந்தவிகடன், 1971)


காலம் - 2008
நாயகன் - கமலஹாசன்

நல்லவர்களும், நியாயங்களும் ஏன் தண்டிக்கப்படுகின்றன என்று பல படங்களில் கேள்வி கேட்டவர் கமல். மகாநதி அருமையான உதாரணம், அன்பே சிவம் அதன் இன்னொரு பதிவு.  தசாவதாரம் படமும் இதே கேள்வியைத்தான் கேட்கிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் அஸின் கேட்கும் கேள்வி இது.
கடவுள் இருக்கார்னு ஒத்துக்கறீங்களா?
இருக்கார்னு சொல்ல மாட்டேன். ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லுவேன்.

படத்தில் கமல் இந்த வசனத்தை உச்சரிக்கும்போது ஜெயகாந்தனின் ஆன்மிகச் சிந்தனை பட்டெனத் தெரிப்பது போல இருக்கிறது.


ஜீனியஸ்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அவர்கள் காலம் கடந்தவர்கள்.

5 comments:

முரளிகண்ணன் said...

உங்கள் ஒப்பீடு அபாரம்

குரங்கு said...

யாருங்க ஜீனியஸ்????

ISR Selvakumar said...

கேள்வி எழுப்புகிற எல்லோருமே ஜீனியஸ்தான்.
ஆனால் அந்தக் கேள்விகள் பதில்களை எதிர்நோக்கியதாக இருக்க வேண்டும். பதில்களுக்கு எதிர்திசையில் வீசப்படக்கூடாது.

Anonymous said...

//முரளிகண்ணன் said...
உங்கள் ஒப்பீடு அபாரம்//

Repeateeeeeeee

ISR Selvakumar said...

ஸ்ரீ,
உங்கள் ரிப்பீட்டுக்கு நன்றி.