Monday, October 5, 2009

ஏ.ஆர்.இரகுமான் எம்.எஸ்.வியை காப்பியடித்து ஆஸ்கார் வென்றாரா?


இந்த வாரம் இசை வாரம் போலிருக்கின்றது. என்னுடைய பல பதிவுகள் இசையை பற்றியே பதிவாகியிருக்கின்றது. சரி, விஷயத்திற்க வருகின்றேன்.

வலையுலகின் மிகப்பிரபல பதிவர் அதிஷா ஒரு பதிவு எழுதியுள்ளார். அட்டைக் காப்பிக்கு ஆஸ்கர் - இதுதான் தலைப்பு! இளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பொனி மீதும், ரஹ்மானின் ஜெய்ஹோ மீதும் இன்னமும் பல (ராஜா/ரகுமான்) வெறி பிடித்த இரசிகர்கள் ஆசிட் ஊற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் இசையின் இரசிகர்களாக அல்லாமல் இசையமைப்பாளர்களின் இரசிகர்களாக இருப்பதால் தான் இந்த விபரீதம். அதிஷாவின் இந்தப் பதிவும் ஏ.ஆர்.இரகுமானை பிடிக்காத ஒருவரின் வெளிப்பாடுதான்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” என்ற அற்புதமான மறக்கமுடியாத பாடலை எம்.எஸ்.வி இசையமைத்திருக்கின்றார். இந்தப் பாடலின் மெட்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்து ஆஸ்கர் வென்ற ஜெய்ஹோ பாடலின் மெட்டும் ஒரே மெட்டுதான். எம்.எஸ்.வியை காப்பியடித்துதான் இரகுமான் ஆஸ்கர் ஜெயித்திருக்கின்றார் என்று ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை அதிஷா முன் வைக்கின்றார்.

எம்.எஸ்.வி தின்று போட்ட எச்சிலைத்தான் இன்று இருக்கும் இசை அமைப்பாளர்கள் கையாள்கிறார்கள் என்று எஸ்.பி.பி ஒரு விழாவில் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். அது உண்மைதான் என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் எஸ்.பி.பி பலத்த கண்டனத்துக்கு உள்ளானார் (குறிப்பாக வலையுலகில் இளையராஜா இரசிகர்கள் எஸ்.பி.பியை வறுத்தெடுத்துவிட்டார்கள்). ஒரு பேட்டியில், இது குறித்து ஏ.ஆர்.இரகுமானை கேட்ட போது, இதை ஏன் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், திரை இசையை பொறுத்தவரை, எம்.எஸ்.வியின் பாதிப்பு அவருக்கும் இருக்கிறது என்று அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் அர்த்தம்.

எம்.எஸ்.வியின் பாதிப்பு இருக்கிறது என்பதாலேயே, இரகுமான் எம்.எஸ்.வியை காப்பி அடித்து ஆஸ்கர் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்ட முடியாது. எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” பாடலின் சாயல் இரகுமானின் ஜெய்ஹோவின் ஆரம்ப வரிகளில் இருப்பது போல இருக்கிறது, அவ்வளவுதான். அதிஷா அட்டைக் காப்பி என்று புலம்புவது போல ஜெய்ஹோ பிரதியெடுக்கப்பட்ட பாடல் இல்லை. இருந்தாலும் இதைப் பற்றி இசை தெரிந்த ஒருவர் சொன்னால்தான் நன்றாக இருக்கும். எனவே இது குறித்து என்னுடைய நண்பர், இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயணன் அவர்களை கேட்டேன். அவர் அதிஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலாக ஒரு பதிவையே எழுதிவிட்டார். இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

அதிஷா பிரபல பதிவர், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவர் அல்ல. எனவே இன்னும் பல இசை வல்லுனர்களை கேட்டு, சந்தேகங்களை களைந்து தனது தவறான குற்றச்சாட்டுக்கு மறுப்பு  எழுதுவார் என்று நம்புகிறேன். ஜெய்ஹோ!

4 comments:

Anonymous said...

Dear selva
please dont waste your and our time for these kind of craps in future,otherwise nobody will listen to your posts,
this fellow is a utter idiot of the tamil blogger world,
who already hated by whole community.
dont encourage him by posting comments or publishing answering posts.
raja is a genius,
equally rehman is a genius.
please dont compare those peaples works.
idiotic post from him is not a wonder.

Gurusimman said...

Dear Selva,

dont boast this guy. Athisa is famous for stupid popularity (prabala pathivarlaam too much).. These are all mere stupid tactics to increase hits of his blog.. Dont make him popular by posting in ur blog.. you have got too much things to write. there is noone to critisize Raja,Rahman,MSV... Athisa is a Gnana Sooniyam.. (without knowledge about music how can someone criticize music if he has a blog page and computer,internet he can type any crap?)

Please continue your blog works.. please dont mind these guys who work for cheap popularity..

Good citizen said...

Aathisha is a good blogger, but sometimes he write like a nut,every music has got inspirations even MSV has got many inspiration which Thigaraajabaagavader,
no one could say its purely mine.As the anonymy said,don't give importance to this nutty blog.Keep it up man

Anonymous said...

இது உண்மை அல்ல இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்