Saturday, February 18, 2012

மாத்தியோசி - 10th மற்றும் +2 மாணவர்களுக்கு பயிற்சி முகாம்!

மாத்தியோசி!

உலக அரங்கில் இந்திய இளைஞர்களின் வீச்சு கவனம் பெற்று வருகிறது. அரசியல், கலை, இலக்கியம், அறிவியல் என அனைத்திலும் ராக்கெட் பாய்ச்சலாக அவர்களின் ஆற்றல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அடுத்த வல்லரசாக நம்மை நினைத்து அமெரிக்கா அச்சம் கொள்கிறது. சபாஷ்! மிகவும் நல்லது!

ஆனால் இதனை இந்திய இளைஞர்கள் அனைவரும் உணர்ந்திருக்கின்றார்களா? அவர்களுக்கான வாய்ப்பையும், வசதிகளையும் பெற்றுக் கொள்கிறார்களா என்றால்... இல்லை என்பதுதான் பதில். இந்தியாவைப் பொறுத்தவரை, வணிக ரீதியான கலாச்சாரம் பரவி வருகிறது. இதனால் கிராமம், நகரம் என்ற எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டு வருகின்றன. இந்த உலகமயமாக்கலில் வெற்றி பெருவது 20 சதவிகித இளைஞர்கள் என்றால் இந்த அலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுவிடுவது 80 சதவிகித இளைஞர்கள்.

ஆனால் ஒரு வழிகாட்டி இருந்தால் அனைவரும் சாதிக்கக்கூடியவர்களே! மாத்தியோசி! இந்த சிந்தனையின் அடிப்படையில் உருவானதுதான். விரைவில் இளைய தலைமுறையின் எழுத்துக்களையும், கேள்விகளையும், வெற்றிகளையும் தாங்கி பத்திரிகை வடிவில் மாதா மாதம் வெளிவரப் போகிறது.

முதற்கட்டமாக திருவள்ளுர் மாவட்டத்தில் மாத்தியோசி தனது சிறகுகளை விரிக்கும். விரைவில் தமிழகமெங்கும் வானை அளக்கும்! பத்திரிகையாக அறிமுகமானாலும் இன்டர்நெட், ரேடியோ, தொலைகாட்சி என அனைத்திலும் முத்திரை பதிக்கும். இளைஞர்களின் படைப்புகளுக்கே முன்னுரிமை! இளைஞர்கள் தங்கள் படைப்புகளையும், எண்ணங்களையும் உடனே அனுப்பி வைக்கலாம். பெண்கள் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்று மாத்தியோசி விரும்புகிறது.


மாத்தியோசி பத்திரிகை வடிவில் உங்கள் கைகளுக்கு வருவதற்கு முன், உங்கள் மனதில் அமரும் முயற்சியாக ஒரு அறிவிப்பு!


சக்ஸஸ்!

பரிட்சையை பயம் இல்லாமல் எதிர்கொள்வது எப்படி?
10வது மற்றும் ப்ளஸ் டு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்!



நாள்
பிப்ரவரி 19, 2012 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம்

காலை 9.30 முதல் 12.30 வரை

இடம்

கே.பி.வி.கே. கல்யாண மண்டபம் (பொன்னேரி)
அனுமதி இலவசம்!

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாத்தியோசி

மின்னஞ்சல் - mathiyocee@gmail.com

மொபைல்
சுரேஷ் - 9962523088
சந்தோஷ் - 9791085299

1 comment:

shunmuga said...

மிக நல்ல முயற்சி !