Tuesday, February 21, 2012

எதற்கோ முத்தம்




அவள் எதற்கோ திரும்பிப் பார்த்தாள்.

நான் அதற்குத்தான் என நினைத்து
அவள் இதழ் படர்ந்தேன்.
அவள் தோள் தவழ்ந்த மல்லிகைச் சரங்கள்
அணைப்பில் கசங்கியபடி ஏதோ சொல்கின்றன.
என்னவென்று கேட்டுக் கொள்கிறேன்,
முத்தங்கள் முடிந்தபின்!

No comments: