ஞாநி வாசகர் கடிதம் போட்டால் கூட குமுதம் பிரசுரிக்காத ஒரு நிலை இருந்தது. ஆனால் ஞாநி ஆனந்தவிகடனுடன் முட்டிக் கொண்டு வந்தவுடன், ஆனந்த விகடனை கடுப்பேற்ற அடுத்த வாரமே குமுதம் ஞாநிக்கு 'ஓ' போட்டது.
அதுவரைக்கும் குமுதத்தில் 'ஓ'ஹோவென படித்ததும்-கிழித்ததுமாக இருந்த பாமரன், ஞாநி வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். 4-5 பக்கங்கள் எழுதிக் கொண்டிருந்த பாமரன், ஞாநியின் வருகைக்குப் பின், 2-3 பக்கங்களுக்கு குறைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் படிச்சதும்-கிழிச்சதும் போதும், என்று துரத்தப்பட்டார். பாவம் பாமரன், ஏதோ குமுதம் புண்ணியத்தில் வாரா வாரம் டீ, காபி குடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஞாநி கல்லா கட்டுகிறார், பாமரன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணாமல் போய்விட்டார்.
குமுதம் வாரா வாரம் ஞாநியின் 'ஓ'விற்கு போஸ்டர் அடிக்கிறது, அட்டைப் படத்தில் முன்னிறுத்துகிறது. ஆனால் 'படித்ததும்-கிழித்ததும்' பாமரனை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? ஞாநியும் பாமரனின் இந்த நிலை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை, அட்லீஸ்ட் நண்பர்கள் வட்டாரத்தில் கூட இது பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை.
விளம்பரங்களில் எல்லாம் தொடரந்து ஞாநியின் பெயரையே குமுதம் புரமோட் செய்ததில் கடுப்பாகி பாமரனே மனம் நொந்து விலகி ஓடி விட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
பின்குறிப்பு -
"படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை"
இவை இந்த வார குமுதத்தில் ஞாநி எழுதியிருக்கும் வரிகள். ஞாநிக்கு வேறு வேலையே இல்லையா?
'குசேலன்' பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏன் பசுபதி பங்கேற்கவில்லை? "எனக்கு வேறொரு ஷீட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை", என பசுபதியே விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும், ரஜினிதான் அவரை வரவிடாமல் செய்துவிட்டார், பசுபதியை வேண்டும் என்றே முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது போல ஓ பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
ரஜினியை பற்றி எப்படி வேண்டுமானாலும் கற்பனை கலந்தாவது காழ்ப்புணர்ச்சியுடன் எழுதலாம் என ஞாநி முனைந்திருக்கிறார்.
எனவே வேண்டும் என்றே, அவரைப்போலவே நானும் கற்பனை கலந்து 'பாமரன் கதையை' எழுதியிருக்கிறேன்.
மன்னியுங்கள்! மிஸ்டர் பாமரன்.
Showing posts with label ரெடி டேக். Show all posts
Showing posts with label ரெடி டேக். Show all posts
Friday, August 29, 2008
Thursday, August 28, 2008
ஓ பக்கங்களை எழுதுவது ஞாநியா?
இந்த வாரம் மொத்தம் 5 பக்கங்களில் ஓ பக்கங்கள் - துவக்க பக்கத்தில் மட்டும் ஞாநியின் பெயர் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு பக்கங்களிலும் ஞாநியின் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது அவற்றை எழுதியது ஞாநிதான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?
இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)
பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.
இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)
பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.
Wednesday, August 27, 2008
விவேக் - கூலிங் கிளாஸை கழட்டினால், நல்ல காமெடி பண்ணலாம்
சிவாஜி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக அழுவார்.
எம்.ஆர்.ராதா குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக நக்கல் அடிப்பார்.
ரஜனி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் காமெடி பஞ்ச் அடிப்பார்.
இதுதான் விவேக்.
விஜய் டிவி லொள்ளு சபா, சன் டிவி டாப் 10 பாடல்கள் இரண்டுமே ஒரே ஸ்டைல். ஏற்கனவே ஹிட்டான படம் அல்லது காட்சியை உல்டா செய்து பேத்தலான சேட்டைகள் செய்வதுதான், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே.
பல நேரங்களில் விவேக்கின் காமெடியும் இதே போலத்தான் இருக்கிறது.
அதிசயமாக விவேக் தமிழ் சினிமாவின் லீடிங் காமெடியன்களில் ஒருவர். அவரே (ரஜினி சொன்னதாக) குமுதத்தில் எழுதியது போல, கருத்து சொல்கிற மேட்டர் மட்டும் இல்லையென்றால், எப்போதோ காணாமல் போயிருப்பார்.
ஆரம்பத்தில் ஒல்லி உடம்புடன் கொஞ்சமாக பாடி லேங்வேஜையும், அதிகமாக மிகிக்கிரியையும் வைத்து சிரிப்புக் காட்டினார். போகப் போக. . . குறிப்பாக கூலிங் கிளாஸ் மாட்டி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பாடி லேங்வேஜ் மறைந்துவிட்டது. வெறும் (சிவாஜி + எம்.ஆர்.ராதா + ரஜினி + சில நேரம் வைரமுத்து) மிக்ஸிங் டயலாக்கை வைத்து வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
மாத்ருபூதம் வழங்கிய சின்னக் கலைவாணர் பட்டம், அவருடைய காமெடி சென்ஸை அமுக்கிவிட்டு, கருத்து இம்சையை முடுக்கிவிட்டுவிட்டது என்பது என்னுடைய எண்ணம்.
பெரும்பாலும், அவருடைய காமெடி அனைத்தும், படத்துடன் ஒட்டாமல் தனி டிராக்காகத்தான் இருக்கிறது. அதனால்தான் 'விஜய் டிவி லொள்ளுசபா' காமெடி போல அடிக்கடி பழைய படங்களை உல்டா செய்யும் டிராக் பிடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட அவர் எக்ஸ்டிரார்டினரி பெர்மாமன்ஸ் கொடுத்ததில்லை. காரணம் 'கருத்து சொல்கிற பாணி'.
இன்னொன்று எப்போதுமே 90 சதவிகித படங்களில் கல்லூரி மாணவன் போல ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் தோற்றம். வெரைட்டியான மேக்கப் கூட இல்லாமல் பல படங்களை ஒப்பேற்றிவிட்டார். அவர் கிராமங்களில் அவ்வளவாக எடுபடாததற்கு காரணம், எப்போதுமே 'சிட்டி லுக்' கொடுத்த அவருடைய உடைகளும், பேச்சுக்களும்தான்.
அசட்டுத்தனங்களும், சேட்டைகளும் நிரம்பிய காமெடியன், படாரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக கண் கலங்க வைக்க வேண்டும். அந்த திறமை விவேக்கிடம் கம்மி.
கூலிங் கிளாசையும், கருத்தையும் கழட்டி வைத்துவிட்டால் நம்மால் இன்னும் நல்ல விவேக்கை பார்க்க முடியும்.
எம்.ஆர்.ராதா குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக நக்கல் அடிப்பார்.
ரஜனி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் காமெடி பஞ்ச் அடிப்பார்.
இதுதான் விவேக்.
விஜய் டிவி லொள்ளு சபா, சன் டிவி டாப் 10 பாடல்கள் இரண்டுமே ஒரே ஸ்டைல். ஏற்கனவே ஹிட்டான படம் அல்லது காட்சியை உல்டா செய்து பேத்தலான சேட்டைகள் செய்வதுதான், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே.
பல நேரங்களில் விவேக்கின் காமெடியும் இதே போலத்தான் இருக்கிறது.
அதிசயமாக விவேக் தமிழ் சினிமாவின் லீடிங் காமெடியன்களில் ஒருவர். அவரே (ரஜினி சொன்னதாக) குமுதத்தில் எழுதியது போல, கருத்து சொல்கிற மேட்டர் மட்டும் இல்லையென்றால், எப்போதோ காணாமல் போயிருப்பார்.
ஆரம்பத்தில் ஒல்லி உடம்புடன் கொஞ்சமாக பாடி லேங்வேஜையும், அதிகமாக மிகிக்கிரியையும் வைத்து சிரிப்புக் காட்டினார். போகப் போக. . . குறிப்பாக கூலிங் கிளாஸ் மாட்டி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பாடி லேங்வேஜ் மறைந்துவிட்டது. வெறும் (சிவாஜி + எம்.ஆர்.ராதா + ரஜினி + சில நேரம் வைரமுத்து) மிக்ஸிங் டயலாக்கை வைத்து வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
மாத்ருபூதம் வழங்கிய சின்னக் கலைவாணர் பட்டம், அவருடைய காமெடி சென்ஸை அமுக்கிவிட்டு, கருத்து இம்சையை முடுக்கிவிட்டுவிட்டது என்பது என்னுடைய எண்ணம்.
பெரும்பாலும், அவருடைய காமெடி அனைத்தும், படத்துடன் ஒட்டாமல் தனி டிராக்காகத்தான் இருக்கிறது. அதனால்தான் 'விஜய் டிவி லொள்ளுசபா' காமெடி போல அடிக்கடி பழைய படங்களை உல்டா செய்யும் டிராக் பிடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட அவர் எக்ஸ்டிரார்டினரி பெர்மாமன்ஸ் கொடுத்ததில்லை. காரணம் 'கருத்து சொல்கிற பாணி'.
இன்னொன்று எப்போதுமே 90 சதவிகித படங்களில் கல்லூரி மாணவன் போல ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் தோற்றம். வெரைட்டியான மேக்கப் கூட இல்லாமல் பல படங்களை ஒப்பேற்றிவிட்டார். அவர் கிராமங்களில் அவ்வளவாக எடுபடாததற்கு காரணம், எப்போதுமே 'சிட்டி லுக்' கொடுத்த அவருடைய உடைகளும், பேச்சுக்களும்தான்.
அசட்டுத்தனங்களும், சேட்டைகளும் நிரம்பிய காமெடியன், படாரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக கண் கலங்க வைக்க வேண்டும். அந்த திறமை விவேக்கிடம் கம்மி.
கூலிங் கிளாசையும், கருத்தையும் கழட்டி வைத்துவிட்டால் நம்மால் இன்னும் நல்ல விவேக்கை பார்க்க முடியும்.
Sunday, August 17, 2008
குசேலன் படத்தின் எடிட்டர் தூங்கிவிட்டாரா? அல்லது கத்துக்குட்டியா?
குசேலன் படத்தை இரண்டாவது முறையாக பார்க்க நேர்நதது. முதல் முறை எனக்காகவும் என் மனைவிக்காகவும். இரண்டாவது முறை எனது மகளுக்காகவும் எனது அம்மாவுக்காகவும். இரண்டு முறையும் இன்டர்வெல்லில் அதே பாப்கார்ன். ஆனால் இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒரு சிறிய மாற்றம். ஆர்.சுந்தர்ராஜன் ஒரு நடிகன் என்கிற மாயையை கேள்விகளால் துளைத்தெடுக்கும் Demystify காட்சியில் 'முக்கியமான சில அரசியல் தொடர்பான கேள்விகளைக் காணோம்'.
இந்தப் படத்தின் எடிட்டர் யார்? மகா மட்டமான எடிட்டிங். எங்கே நீளத்தை கூட்ட வேண்டுமோ அங்கே கத்தரி போட்டிருக்கிறார். எங்கே வெட்டி எறிய வேண்டுமோ அங்கே தூங்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் ஒரே உருப்படியான ரஜினியின் மேடைப் பேச்சுக்குப் பின், யாருடைய ரியாக்சனையும் காட்டாமல் நேராக ஆர். சுந்தர்ராஜனை கதவைத் திறந்து வெளியே கொண்டு வந்துவிட்டார். அதனால் கொஞ்சம் பில்ட் அப் ஆன ரியாக்ஷனும் பாதியிலேயே அம்பேல் ஆகிவிட்டது.
அதே போல ரஜினி, ஆர்.சுந்தர் ராஜன் முதல் அல்லது ஒரே சந்திப்பிற்குப் பின் நேரடியாக ரஜனியின் எகிப்து செட்டிங் டான்சுக்கு வந்திருந்தால், ரசிகர்கள் விசிலடித்திருப்பார்கள். ஆனால் நடுவில் மீண்டும பசுபதியை அழவைத்து டெம்போவை காலி பண்ணிவிட்டார். ஆனால் இதற்கு டைரக்டர் தான் காரணமாக இருந்திருப்பார் என்பது என் சந்தேகம்.
அதே போல லிவிங்ஸ்டன் அண்டு லூசு கும்பல் வரும்போதெல்லாம் அவர்களுடைய ஜீப் மறக்காமல் ஒரு என்ட்ரியும் எக்ஸிட்டும் கொடுக்கிறது.
வடிவேலு நயனதாராவை ஜொள்ளுவிடுகிற காட்சிக்கு அப்புறம் நயன்தாரா தனியாக சோலோ பாட்டு பாடுகிறார். வடிவேலுவை அந்த பாடல் காட்சியிலேயே சேர்த்திருந்தால் ஏதோ ஓரளவுக்கு லாஜிக் இருந்திருக்கும்.
படம் முழுக்கவே எமோஷன் ரியாக்ஷன் ஷாட்ஸ் எல்லாம் தப்புத்தப்பாக இருக்கிறது. மக்கள் வெள்ளத்தைக் காட்டும்போது, பிண்ணனியில் மக்கள் கூச்சல், ஆனால் காட்சியில் மரம் போல மக்கள் அசையாமல் நிற்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா ரியாக்ஷன் ஷாட்டுகளிலும் அனைவரும் குற்றவாளிகளைப் போல தலையை குனிகிற ஷாட்டுகளாகவே இருக்கிறது.
என்னை விட்டால் ஷார்ப்பாக இன்னும் 30 நிமிடத்தை குறைத்து படத்தின் சில காட்சிகளை முன்னே பின்னே போட்டு இன்னும் சுவாரசியமாக்குவேன்.
தற்போது சத்தியம் படத்திலிருந்து 20 நிமிடத்தை நீளம் குறைக்கப் போகிறார்கள் என்று கேள்வி. பார்த்துவிட்டு என்னுடைய கமெண்டுகளை சொல்லுகிறேன்.
இந்தப் படத்தின் எடிட்டர் யார்? மகா மட்டமான எடிட்டிங். எங்கே நீளத்தை கூட்ட வேண்டுமோ அங்கே கத்தரி போட்டிருக்கிறார். எங்கே வெட்டி எறிய வேண்டுமோ அங்கே தூங்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் ஒரே உருப்படியான ரஜினியின் மேடைப் பேச்சுக்குப் பின், யாருடைய ரியாக்சனையும் காட்டாமல் நேராக ஆர். சுந்தர்ராஜனை கதவைத் திறந்து வெளியே கொண்டு வந்துவிட்டார். அதனால் கொஞ்சம் பில்ட் அப் ஆன ரியாக்ஷனும் பாதியிலேயே அம்பேல் ஆகிவிட்டது.
அதே போல ரஜினி, ஆர்.சுந்தர் ராஜன் முதல் அல்லது ஒரே சந்திப்பிற்குப் பின் நேரடியாக ரஜனியின் எகிப்து செட்டிங் டான்சுக்கு வந்திருந்தால், ரசிகர்கள் விசிலடித்திருப்பார்கள். ஆனால் நடுவில் மீண்டும பசுபதியை அழவைத்து டெம்போவை காலி பண்ணிவிட்டார். ஆனால் இதற்கு டைரக்டர் தான் காரணமாக இருந்திருப்பார் என்பது என் சந்தேகம்.
அதே போல லிவிங்ஸ்டன் அண்டு லூசு கும்பல் வரும்போதெல்லாம் அவர்களுடைய ஜீப் மறக்காமல் ஒரு என்ட்ரியும் எக்ஸிட்டும் கொடுக்கிறது.
வடிவேலு நயனதாராவை ஜொள்ளுவிடுகிற காட்சிக்கு அப்புறம் நயன்தாரா தனியாக சோலோ பாட்டு பாடுகிறார். வடிவேலுவை அந்த பாடல் காட்சியிலேயே சேர்த்திருந்தால் ஏதோ ஓரளவுக்கு லாஜிக் இருந்திருக்கும்.
படம் முழுக்கவே எமோஷன் ரியாக்ஷன் ஷாட்ஸ் எல்லாம் தப்புத்தப்பாக இருக்கிறது. மக்கள் வெள்ளத்தைக் காட்டும்போது, பிண்ணனியில் மக்கள் கூச்சல், ஆனால் காட்சியில் மரம் போல மக்கள் அசையாமல் நிற்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா ரியாக்ஷன் ஷாட்டுகளிலும் அனைவரும் குற்றவாளிகளைப் போல தலையை குனிகிற ஷாட்டுகளாகவே இருக்கிறது.
என்னை விட்டால் ஷார்ப்பாக இன்னும் 30 நிமிடத்தை குறைத்து படத்தின் சில காட்சிகளை முன்னே பின்னே போட்டு இன்னும் சுவாரசியமாக்குவேன்.
தற்போது சத்தியம் படத்திலிருந்து 20 நிமிடத்தை நீளம் குறைக்கப் போகிறார்கள் என்று கேள்வி. பார்த்துவிட்டு என்னுடைய கமெண்டுகளை சொல்லுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)