Sunday, July 15, 2012

குண்டலினிச் சித்தரே நீவீர் எங்கே?

மிளகாய்பொடி, உப்பு தடவி பிஞ்சு வெள்ளரிக்காயை வாங்கும்போது,
காளி முரசு என்றொரு ஆன்மீக மாத இதழ் கண்ணில் பட்டது.

குண்டலினிச் சித்தர் தவயோகி என்ற பட்டத்துடன் அட்டையிலேயே பெரிதாக இருந்த ஆசிரியரின் பெயரை வாசிக்க முடியாமல், உப்பு ஈரம் கிழித்துவிட்டிருந்தது.

உள்ளேதான் எதிர்பாராத சுவாரசியம். குழந்தைப் பாட்டு!



மெல்லிய பூக்களை வண்டு - அக்கா
மிதி மதியென்று மிதிக்கிறதே.
பூக்களை மிதிக்கும் வண்டை -அக்கா
கொஞ்சமும் எனக்குப் பிடிக்கலையே.

பூக்களை மிதித்தே வண்டு - பாப்பா
புதுப்புது தேனை எடுக்கிறதே.
புதுப்புது தேனை எடுத்தே - பாப்பா
புசித்திட நமக்கும் கொடுக்கிறதே.

குண்டலினி, யோகா, சக்தி பீடம் அது இது என்று சில பக்கங்கள் நிறைந்திருந்தாலும், கைகால் கழுவுவது எப்படி? கோலம் போடலாமா? உட்பட இந்த பாப்பா பாட்டும் எனக்கு எக்கச்சக்க ஆச்சரியம்.

புதுப்புது என்ற வார்த்தைக்குப் பதில் தித்திக்கும் என்பதை பயன்படுத்தலாமோ?

காளி முரசு ஆசிரியர் குண்டலினிச் சித்தரே... நீவிர் எங்கே இருக்கிறீர்? உமது முழுப்பெயர் என்ன ஐயா?

No comments: