Monday, August 15, 2022

எனக்கு ஏன் இரகுமான் பாடல்களைப் பிடிக்கிறது?

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு

தேனைத் தந்தா என்னவாகும்?
Rahman for all my moods. I think I'm in time sync with A.R.Rahman's music. I feel vibrations and deep emotions kindled with all his latest compositions.
கிழக்குச் சீமையிலே பாடல் வெளியானபோது, வாக்மேனில் கேசட்டைப் போட்டுவிட்டு வேலி காத்தான் செடிகள் அடர்ந்த கிரிக்கெட் மைதானத்தில் தனியாக அமர்ந்து இரசித்தேன். காற்றில் பறப்பதைப் போலிருந்தது. நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ”மறக்குமா நெஞ்சம்” பாடல் வெளியானபோதும், மொட்டை மாடியில் தனியனாக அமர்ந்து பாடலுக்குள் அமிழ்ந்தேன். எத்தனை முறை தொடர்ந்து பாடலைக் கேட்டேன் என்று கணக்கே இல்லை.
இதை வாசிக்கும் நீங்கள் தற்போதைய இரகுமான் பாடல்களை எப்படி இரசிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நான் முன்பு எப்போதையும் விட இரகுமானின் இசையுடன் மிக நெருக்கமாக உணர்கிறேன். அதற்குக் காரணமாக என் தற்போதைய மன ஓட்டம் மற்றும் தற்போதைய தேடல்களுக்கு இரகுமானின் இசை ஒரு வடிகாலாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.
எங்கு தொடங்கும்
எங்கு முடியும்
ஆற்றின் பயணம்!


No comments: