Thursday, August 18, 2022

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ISR 5 நிமிட குறும்படப் போட்டி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் உரிமை - Child Right பற்றி வலியுறுத்தும் படங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் என்பதால் போட்டியின் நல் நோக்கத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.

ஆகஸ்டு 22ம் தேதி முதல் துவங்கவுள்ள ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு இதன் மூலம் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
எந்தக் கட்டணமும் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் TNOU - School of Journalism and New Media Studies சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த படங்களுக்கான 3 பரிசுகளுடன் பல்வேறு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் சில முன்னணி கல்வி மற்றும் மீடியா நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யார் யார் என்பதை தொடர்ச்சியாக அறிவிப்போம். அவர்களுடன் இணைந்து போட்டியாளர்களுக்கு குழந்தைகள் உரிமை என்றால் என்ன என்பதை புரிய வைத்து தரமான படங்களையும், படைப்பாளிகளையும் உருவாக்குதுதான் இப்போட்டியின் நோக்கம்.
இப்போட்டி செப்டம்பர் மாத இறுதியில் நிறைவுக்கு வரும். போட்டியின் இறுதியில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் குறைந்தபட்ச பங்களிப்பாக, இது பற்றி நன்கு அறிந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகம் செய்த திருப்தி எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9962295636 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு எப்படி பங்கேற்பது போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு நன்றி!

No comments: