Thursday, May 7, 2009

இலங்கை அகதிகளுக்கு உதவும் சூப்பர் ஸ்டார்?

”தனி ஈழம் வேண்டும், ஆனால் அதை வேறு யாரும் வாங்கித்தரக் கூடாது. நான்தான் வாங்கித்தருவேன்” என்று தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் முதல் குட்டிக் கட்சிகள் வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் இவர்களது கவலையில் மனிதாபிமானத்தைவிட அரசியல் இலாபம் அதிகம் கலந்திருப்பதால், அனைத்துக் கட்சியினரின் மீதும் சந்தேகம் வருகிறது.

பிரபாகரன் மீண்டும் பலம் பெற்று படைகளை முன்னெடுத்துச் சென்றால்தான் இந்த அரசியல்வாதிகளின் அலட்டல்கள் குறையும். ஈழ விஷயத்தில் இவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் குணங்கள் மறையும்.

ஈழத்தில் போர் முனையில் சிக்கி தினம் தினம் மாண்டுபோகும் தமிழர்களுக்காக (தேர்தல் நேரத்தில்) கண்ணீர் வடிக்கும் இவர்கள், தப்பி வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா என்று லென்ஸ் வைத்துத் தேடினாலும் அகப்படமாட்டேன்கிறது.

சூப்பர் ஸ்டார் வேகமான ஆள் என்றாலும், மற்றவர்களுக்கு உதவும்போது மிகவும் அமைதியாக விளம்பரமின்றி செய்யக் கூடியவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். முன்பு ஜெய்சங்கரை அப்படிச் சொல்வார்கள்.
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அவ்வப்போது தன்னால் ஆன உதவிகளை ரஜினி தொடர்ந்து செய்து வருகிறாராம். ஆனால் சத்தமின்றி அவர்தான் உதவுகிறார் என்பது தெரியாமல் உதவிகள் அவர்களைப் போய்ச் சேருகின்றதாம்.

ரஜினி அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையா பொய்யா என்று சந்தேகம் வந்தாலும் சத்தமின்றி உதவிகள் நடப்பதால் உண்மையாக இருக்கட்டுமே என்று மனது நினைக்கிறது.

No comments: