Saturday, June 30, 2012

புகாருக்கு செவிசாய்த்த வளசரவாக்கம் மின்வாரியம்!

அது சரியில்ல, இது சரியில்லன்னு எழுதறது மட்டும் பத்தாது. அது சம்பந்தமா ஏதாவது புகார் கொடுத்தீங்களா?
இல்லை . . .
ஆழ்வார் திருநகர்வாசிகளாவது புகார் தந்தார்களா?
தெரியவில்லை . . .
இது சரியான அணுகுமுறை அல்ல! முதல்ல அவங்களை விசாரிங்க. அவங்க எழுத்து மூலம் புகார் தந்திருந்தா ஒரு காப்பி வாங்கிட்டு வாங்க. நாம அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.

இன்று காலை வளசரவாக்கம் மின்வாரியத்தின் அலட்சியம் என ஒரு புகார் பதிவு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு, ஃபேஸ்புக் வழியாக அறிமுகமான நண்பர் சி.எஸ்.ராம் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரும் நானும் தொலைபேசியதைத்தான் மேலே எழுதியிருக்கிறேன்.

விசாரித்ததில் யாரும் எழுத்து மூலம் புகார் தரவில்லை என்பது தெரிந்தது. உடனே நண்பர் ராம், மின்வாரிய எமர்ஜென்சி நம்பரை அழைத்து, என் பெயரில் அவரே ஒரு புகாரை பதிவு செய்தார். கார்ப்பரேஷன் அலுவலகத்திலும் ஒரு புகாரை பதிவு செய்தார். பின்னர் மேயர் அலுவலகத்திற்கும் புகாரை எடுத்துச் சென்றார்.

புகார் தரும் முன் - இன்று காலை வரை அலட்சியம்




புகார்கள் காலை 10.30 மணி அளவில் பதியப்பட்டன. மாலை ஒரு ஆழ்வார் திருநார் அன்பர் வீட்டுக்கு வந்துவிட்டார். விஷயம் தெரியுமா? வெளியிலயே கிடந்து ஷாக் பயம் தந்து கொண்டிருந்த கேபிளை இன்னைக்கு மத்தியானம் சரி பண்ணி, யாருக்கும் தொந்திரவில்லாமல் பூமிக்குள்ள புதைச்சுட்டாங்க என்றார்.


புகார் தந்த பின் - இன்று மாலை முதல் சீர்செய்யப்பட்டு


ஏரியாவாசிகள் தந்த புகாராலா? நண்பர் ராம் கொடுத்த அழுத்தத்தாலா எனத் தெரியாது. வேலை நடந்துவிட்டது. தாமதமாக நடந்தது என்றாலும், உருப்படியாக வேலை நடந்துவிட்டது. மகிழ்ச்சி!

அதிகாரிகளின் மேல் புகார் தந்தால் மட்டும் போதுமா? அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அதையும் பாராட்ட வேண்டுமல்லவா... !!!

அதனால் ஆழ்வார் திருநகர்வாசிகள் சார்பாக, வளசரவாக்கம் மின்வாரியத்துக்கு ஒரு சபாஷ்!

உபயோகமான தகவல் - உங்கள் கவனத்திற்கு!

  • மின்வாரியம் எமர்ஜென்சி ஃபோன் -  155333 (சென்னைக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம்)
  • கார்ப்பரேஷன் புகார் மையம் - 1913


No comments: