Wednesday, May 13, 2009

தேர்தல் நிலவரம் - காலை 10 மணி - அ.தி.மு.க முன்னணி

தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் வழக்கம்போல சொதப்பிக்கொண்டிருக்க, ஆங்கில செய்திச் சேனல்கள் பரபரப்பாக இருக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதன்மை செய்தி ஆசிரியர் ஜெயலலிதாவை சென்னை சூப்பர் குயின் என்று வர்ணித்தார். நான் கவனித்த சேனல்களின் நிலவரப்படி, அ.தி.மு.க முந்திக்கொண்டிருக்கிறது.
மத்திய சென்னையிலும் இன்னும் பல பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை அமுக்கினால் உதயசூரியன் சின்னத்தில் விளக்கு எரிவதாக ஜெயலலிதா குற்றப்பத்திரிகை வாசித்தார். நேரலையில் தோன்றிய சோ.இராமசுவாமி தி.மு.க பதவியலிருந்தால் அதற்கு வாய்ப்பிருக்கிறது வழக்கம்போல ஜெயலலிதாவை சப்போர்ட் பண்ணினார்.
”அணிமாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, பி.ஜே.பி உட்பட என்னை எல்லா கட்சியினரும் அணுகியுள்ளார்கள். நான் நினைப்பது போல தேர்தல் முடிவுகள் வந்துவிட்டால், நான் டெல்லி சென்று எனது முடிவை தெரிவிப்பேன்” என்றார் ஜெயலலிதா.
”காங்கிரசும், ஜெயலலிதாவும் கைகுலுக்கும் வாய்ப்புகளும் பெருகிக் கொண்டு வருகிறது” என்று சோ குறிப்பிட்டார்.

No comments: