Wednesday, August 20, 2008

நானே கேள்வி - நானே பதில்

இது ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்டது தான்
பொதுமேடையில் "அடிப்பேன் உதைப்பேன்" என்று பேசலாமா?

யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் அப்படி பேசுவது தவறு. சினத்தின் உச்சியில் நின்று கொண்டு இதுபோல உறுமுகிற எவரும், சினத்திற்கு தான் அடிமையாவது மட்டுமல்லாமல், அந்தப் பேச்சைக் கேட்கிறவர்களையும் நிதானம் இழக்க வைக்கிறார்கள். ஒருவன் கோபப்படுவதும், அவன் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) கோபப்படுபவதும் உடனடியாக நடந்துவிடும். மலைமேல் இருந்து கீழே விழ நேரமாவதில்லை.

பொதுமேடையில் "மன்னிப்பு" கேட்கலாமா?
யாராக இருந்தாலும், என்ன சரியான காரணங்கள் இருந்தாலும் பொது மேடையில் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு நேர்மை வேண்டும். மனதளவில் மிகவும் தைரியமானவருக்கே இது சாத்தியம். தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்பவரால் மட்டுமே பொது மேடையில் மன்னிப்பு கேட்க முடியும். அவனுடைய மன்னிப்பை தைரியம் என்று உணர்ந்து கொள்ளவும், அதனை பின்பற்றி மற்றவர்கள் (எதிரிகள் + நண்பர்கள்) திருந்தவும் நாட்கள் பிடிக்கும். சிகரங்களைத் தொட எப்போதுமே நிறைய காலம் ஆகும்.

No comments: