Monday, April 27, 2009

கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்

அண்ணா நினைவிடத்தில் திடீரென இன்று காலை 6 மணி முதல், தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிலவரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதா அண்டு கோ, புதிய கூட்டாளியான ரவிஷங்கர் துணையுடன் அவற்றை ஓட்டுக்களாக மாற்றும் முயற்சியில் நேற்று முதல் மாங்காய் அடித்தார்கள்.

கலைஞருக்கு வேறு வழியே இல்லை. நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலையைப் போலவே, அரசியல் நிலையும் தேய்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது. இதை விட்டால் வேறு நல்ல தருணம் இல்லை. உடல் நிலையை விட்டுக் கொடுத்தாவது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள உண்ணாவிரதத்தை துவங்கிவிட்டார்.

உணர்வுகளை வெல்லும் விரதமா, மாலையில் ஜீஸ் குடிக்கும் விரதமா என்பது அவருடைய உண்ணாவிரத்தின் தீவிரத்தைப் பொறுத்தது. காலையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் முதல்வரை தொலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டார். இன்னும் பல தொலைபேசி அழைப்புகளும் நேரில் வந்து நலம் விசாரிப்புகளும் தொடரும். சன் டிவியும், கலைஞர் டிவியும் அவற்றை நேரலைகளாக காட்டிக் கொண்டிருக்கும்.

ஆங்கில செய்திச் சேனல்கள் காலையிலேயே கருணாநிதியின் உண்ணாவிரதத்தை பொலிட்டிக்கல் விரதம் என்று வர்ணிக்க ஆரம்பித்துவிட்டன. இதே போல கேலிகளும் சந்தேகங்களும் பல முனைகளிடமிருந்தும் தொடரும்.

இந்திய-இலங்கை அரசுகளிடமிருந்து எந்த தீர்மானமான முடிவுகளும் தெரிவதற்குமுன் கலைஞரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தால், அவருடைய அரசியல் வாழ்வின் மிக சீரியஸான ஜோக் இதுவாகத்தான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் கருணாநிதி என்பவரின் அரசியல் வாழ்வின் முடிவாக இது மாறிவிடக் கூடும்.

பார்க்கலாம்!

6 comments:

Unknown said...

கடிதம் எழுதியவர் , தந்தி அடித்தவர் தேர்தலுக்காக மன்னிக்கவும் ஓட்டுக்காக இதையாவது செய்தாரே... மே 13 க்கு பிறகு எதையும் எதிர் பார்க்க முடியாது... ஆண்டவா ... தேர்தல் தள்ளி போக கூடாத ?.

Senthil Kumar said...

கடிதம் எழுதியவர் , தந்தி அடித்தவர் தேர்தலுக்காக மன்னிக்கவும் ஓட்டுக்காக இதையாவது செய்தாரே... மே 13 க்கு பிறகு எதையும் எதிர் பார்க்க முடியாது... ஆண்டவா ... தேர்தல் தள்ளி போக கூடாத ?.

Anonymous said...

iooo ioooo thaanga mudiyaladaa saamee

Abdul Rahuman said...

Karunanidhi done it, Srilankan government announced militiary operation against LTTE is over.
Thank you Mr.Karunanidhi , You are the MAN, u did it in the right time. WE WILL VOTE FOR YOU...

Anonymous said...

Who told Karunanidhi stopped the war?

Muthukrishnan said...

Protest is good..But we should not do it at our convinent time..We could have done when people started to die..Absolutely Not at the end of the war.

When the situation becomes such as "Politicians are the only persons who are possible to earn very less amount rather than in any other department / services".
in another word, Public's mindset and election candidate's mindset should be made clearly that they cannot earn any amount apart their salary(Not any kind of corruption). If they did, their total belongings should be acquired by the Indian government.

If the situation comes, we can really expect politician to work for people....

Talking about our politicians is literally killing our times.....Thats the mistakes I have done just now.