Tuesday, April 28, 2009

தா.பா அவர்களே! நீங்களும் ஜெ, கருணாநிதி, ராமதாசு போல வாங்கிய சொத்தை மறைக்கிறவரா?

தா.பாண்டியன் தான் வாங்கிய சில சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்குதல் செய்திருக்கிறார், என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த புகார் மனுவை நிராகரித்து தா.பாண்டியனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுவிட்டது.

அந்தப் புகார் உண்மைதான் என்றும் நரேஷ்குப்தாவின் தலைமையில் உள்ள தேர்தல் ஆணையம் சரியாக விசாரிக்கவில்லை என்றும் இடித்துக்கூறி, கருணாநிதி இன்று ஒரு பேட்டி அளித்தார். பேட்டியின் போது (அம்மாவிடமிருந்து தாவி ஐயனிடம் தஞ்சமடைந்திருக்கும்) வழக்கறிஞர் ஜோதி ஏதேதோ சட்ட விதிகளைக் கூறி தா.பாண்டியன் சொத்து வாங்கியதற்க்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை காண்பித்தார்.

பேட்டி முடியும் போது அருகிலிருந்த வீராச்சாமி அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபாலின் மேல் ஒரு புகார் பட்டியல் வாசித்தார். வேணுகோபால் தற்போது குடியிருக்கும் ஒரு வீட்டிற்கு பல வருடங்களாக கார்ப்பரேஷன் டாக்ஸ் கட்டவில்லை, அது மட்டுமல்லாமல் சென்ற முறை ஒரு தேர்தலில் போட்டியிட்டு இன்னமும் அதற்க்கான செலவுக் கணக்கை காட்டவில்லை. விதிப்படி ஒருவர் தேர்தல் செலவுக் கணக்கை காட்டாவிட்டால் அடுத்த 6 ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஆனால் தேர்தல் ஆணையம் வேணுகோபாலின் மீதுள்ள புகாரை தள்ளுபடி செய்து அவருடைய மனுவையும் ஏற்றுக் கொண்டுவிட்டது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் காட்டினார்.

இதற்கு தேர்தல் என்ன பதில் கூறப் போகிறது? அ.தி.மு.க, தா.பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம், இன்றைய தேர்தல் மேடை பாப்கார்ன்கள்.

ஒன்று மட்டும் உறுதி! இன்று எல்லா அரசியல்வாதிகளும் சொத்து சேர்க்கிறார்கள். ஞாநி அடிக்கடி எழுதுவது போல வழக்கறிஞர் ஜோதி போன்ற படித்த, சட்டம் தெரிந்தவர்களை வைத்துக்கொண்டு அனைத்தையும் மறைக்கிறார்கள்.

அவர்களை வேறு எந்த சமயத்திலும் சாதாரண பொது ஜனங்களால் கேள்வி கேட்க முடிவதில்லை. தேர்தல் நேரத்தில் பொது ஜனங்களின் கோபங்களை அரசியல்வாதிகள் குண்டர்களைக் கொண்டு அடக்குவதில்லை. எனவேதான் தற்போது தலைவர்களின் மேல் ஷீக்களும் செருப்புக்களும் பறக்கின்றன.

1 comment:

Indian said...

Good. Hope he will again say some thing for this. That will be a comdy to hear, but actually that would be looted from our hard earned tax money.....